புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து ஊழியார்கள் இன்று (மார்ச் 14) ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணிமனையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அப்போது உடனடியாக போனஸ் வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே புதுச்சேரியில் தமிழ்நாடு அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கும், ஹேட்டர்களுக்கும் மெசேஜ் சொன்ன அஜித் - நினைவுடுத்திய மேனேஜர்!