ETV Bharat / bharat

புதுச்சேரியில் சீட்டு கம்பெனி ரூ.18 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்

author img

By

Published : Nov 30, 2020, 3:29 PM IST

புதுச்சேரி: 18 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சீட்டு கம்பெனியை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்டோர் போராட்டம்
பாதிக்கப்பட்டோர் போராட்டம்

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் அதே பகுதியில் சீட்டு கம்பெனி நடத்திவருகிறார். இவர் தன்னிடம் செலுத்தும் பணத்திற்கு இரட்டிப்பாகத் தொகை வழங்கப்படும் என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ. 18 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டோர் போராட்டம்

பணம் கொடுத்த நபர்கள் அதனைத் திரும்பக் கேட்டபோது 2020 மார்ச் மாதம் தருவதாகத் தெரிவித்தார். பின்னர் கரோனா ஊரடங்கால் சீட்டு கம்பெனியை மூடினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இது குறித்து சஞ்சீவ் குமார் தம்பி பிரகாஷ் குமார் என்பரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஏற்கனவே புதுச்சேரியில் சில சமூக செயற்பாட்டாளர்களுக்கும், தொண்டு நிறுவனம் நடத்திவருபவர்களுக்கும் நட்சத்திர உணவகத்தில் பிரமாண்டமாக விருது அளித்தவர் சஞ்சீவ் குமார் தம்பி பிரகாஷ் குமார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்!

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் அதே பகுதியில் சீட்டு கம்பெனி நடத்திவருகிறார். இவர் தன்னிடம் செலுத்தும் பணத்திற்கு இரட்டிப்பாகத் தொகை வழங்கப்படும் என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ. 18 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டோர் போராட்டம்

பணம் கொடுத்த நபர்கள் அதனைத் திரும்பக் கேட்டபோது 2020 மார்ச் மாதம் தருவதாகத் தெரிவித்தார். பின்னர் கரோனா ஊரடங்கால் சீட்டு கம்பெனியை மூடினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இது குறித்து சஞ்சீவ் குமார் தம்பி பிரகாஷ் குமார் என்பரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஏற்கனவே புதுச்சேரியில் சில சமூக செயற்பாட்டாளர்களுக்கும், தொண்டு நிறுவனம் நடத்திவருபவர்களுக்கும் நட்சத்திர உணவகத்தில் பிரமாண்டமாக விருது அளித்தவர் சஞ்சீவ் குமார் தம்பி பிரகாஷ் குமார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.