ETV Bharat / bharat

ரூ.3 லட்சத்துக்கு பச்சிளம் சிசு விற்பனை - உண்மையான பெற்றோரை தேடும் போலீஸ்!

author img

By

Published : Apr 22, 2023, 12:56 PM IST

கேரளாவில் பச்சிளம் சிசு 3 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Baby
Baby

திருவனந்தபுரம் : கேரளாவில் 3 லட்ச ரூபாய் பணத்திற்காக பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் சிசுவை விற்று தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் குழந்தை விலை கொடுத்து வாங்கிய பெண்ணை கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தைக்காடு பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, கரமானா பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கடந்த 10 ஆம் தேதி 3 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை குறித்து கடந்த 17ஆம் தேதி கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் பச்சிளம் சிசுவை மீட்டனர். மேலும் குழந்தைகள் உதவி எண் மற்றும் குழந்தை நல அமைப்பினரிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பனூர் சிறப்பு படைப் பிரிவு போலீசார் பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்த நிலையில், இரு தரப்பினர் குழந்தை விற்பனை செய்வது கூடி பேசிக் கொண்டதாகவும், அதற்காக சிசுவின் உண்மையான தாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

அதேநேரம் பிடிபட்ட பெண், குழந்தையின் உண்மையான தாயை தனக்கு முன்னரே தெரியும் என்றும், அவருக்கு குழந்தைய தத்துக் கொடுக்க விருப்பம் இருந்ததாகவும், ஆனால் அவரது கணவர் பணம் கேட்டு மிரட்டியதால் பணம் கொடுத்து குழந்தை வாங்கும் சூழல் நேரிட்டதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தை விற்பனை சட்டத்திற்கு புறம்பானது என தனக்கு தெரியாது என பிடிபட்ட பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமறைவான குழந்தையின் உண்மையான பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் இந்த சம்பவம் குறித்து மாநில மருத்துவத் துறை இயக்குனர் விசாரணை நடத்தி கூடிய விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

பணத்திற்காக பச்சிளம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் புகார் தெரிவிக்கப்படாமலே இது போன்ற குழந்தை விற்பனைகள் நடைபெறுகிறதா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்! கேரளா பயணம் ரத்தாகுமா?

திருவனந்தபுரம் : கேரளாவில் 3 லட்ச ரூபாய் பணத்திற்காக பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் சிசுவை விற்று தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் குழந்தை விலை கொடுத்து வாங்கிய பெண்ணை கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தைக்காடு பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, கரமானா பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கடந்த 10 ஆம் தேதி 3 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை குறித்து கடந்த 17ஆம் தேதி கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் பச்சிளம் சிசுவை மீட்டனர். மேலும் குழந்தைகள் உதவி எண் மற்றும் குழந்தை நல அமைப்பினரிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பனூர் சிறப்பு படைப் பிரிவு போலீசார் பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு உண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்த நிலையில், இரு தரப்பினர் குழந்தை விற்பனை செய்வது கூடி பேசிக் கொண்டதாகவும், அதற்காக சிசுவின் உண்மையான தாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

அதேநேரம் பிடிபட்ட பெண், குழந்தையின் உண்மையான தாயை தனக்கு முன்னரே தெரியும் என்றும், அவருக்கு குழந்தைய தத்துக் கொடுக்க விருப்பம் இருந்ததாகவும், ஆனால் அவரது கணவர் பணம் கேட்டு மிரட்டியதால் பணம் கொடுத்து குழந்தை வாங்கும் சூழல் நேரிட்டதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தை விற்பனை சட்டத்திற்கு புறம்பானது என தனக்கு தெரியாது என பிடிபட்ட பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமறைவான குழந்தையின் உண்மையான பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் இந்த சம்பவம் குறித்து மாநில மருத்துவத் துறை இயக்குனர் விசாரணை நடத்தி கூடிய விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

பணத்திற்காக பச்சிளம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் புகார் தெரிவிக்கப்படாமலே இது போன்ற குழந்தை விற்பனைகள் நடைபெறுகிறதா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்! கேரளா பயணம் ரத்தாகுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.