ETV Bharat / bharat

Amrit Bharat : 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடக்கம் - தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் எவை?

author img

By

Published : Aug 6, 2023, 3:31 PM IST

நாடு முழுவதும் 508 சிறிய ரயில் நிலையங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் "அம்ரித் பாரத்" திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: நாடு முழுவதும் ஆயிரத்து 309 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக "அம்ரித் பாரத்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட ரயில் நிலையங்களை தேர்வு செய்து, அவற்றை உலகத் தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்டமாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 6) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்ட்ராவில் 44 ரயில் நிலையங்களும், மேற்குவங்க மாநிலத்தில் 37 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 34 ரயில் நிலையங்களும், அசாமில் 32 ரயில் நிலையங்களும், ஒடிஷாவில் 25 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் 22 ரயில் நிலையங்களும், குஜராத் மற்றும் தெலங்கானாவில் 21 ரயில் நிலையங்களும், ஜார்க்கண்டில் 20 ரயில் நிலையங்களும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரயில் நிலையங்களும், ஹரியானாவில் 15 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிபூண்டி, அரக்கோணம், விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், போத்தனூர், நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக கழிப்பறைகள், மின் தூக்கி, இலவச வைஃபை, நவீன விற்பனை அரங்குகள், நவீன முறையில் பயணிகள் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ரயில் நிலையமும் குறிப்பிட்ட பகுதியின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும், மின்மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: 73 ரயில் நிலையங்களுக்கு அடித்தது லக்: பட்டியலில் உங்கள் ஊர் இருக்கா பாருங்க!

டெல்லி: நாடு முழுவதும் ஆயிரத்து 309 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக "அம்ரித் பாரத்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட ரயில் நிலையங்களை தேர்வு செய்து, அவற்றை உலகத் தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்டமாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 6) காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்ட்ராவில் 44 ரயில் நிலையங்களும், மேற்குவங்க மாநிலத்தில் 37 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 34 ரயில் நிலையங்களும், அசாமில் 32 ரயில் நிலையங்களும், ஒடிஷாவில் 25 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் 22 ரயில் நிலையங்களும், குஜராத் மற்றும் தெலங்கானாவில் 21 ரயில் நிலையங்களும், ஜார்க்கண்டில் 20 ரயில் நிலையங்களும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரயில் நிலையங்களும், ஹரியானாவில் 15 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிபூண்டி, அரக்கோணம், விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், போத்தனூர், நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக கழிப்பறைகள், மின் தூக்கி, இலவச வைஃபை, நவீன விற்பனை அரங்குகள், நவீன முறையில் பயணிகள் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ரயில் நிலையமும் குறிப்பிட்ட பகுதியின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும், மின்மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: 73 ரயில் நிலையங்களுக்கு அடித்தது லக்: பட்டியலில் உங்கள் ஊர் இருக்கா பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.