ETV Bharat / bharat

பேரக்குழந்தைகளை பெற்றுத்தாருங்கள், இல்லையேல் நஷ்ட ஈடு தாருங்கள்! - மகனுக்கு பெற்றோர் கொடுத்த ஷாக்!

author img

By

Published : May 12, 2022, 6:43 AM IST

மகனும், மருகளும் பேரக்குழந்தைகளை பெற்றுத் தர வேண்டும், இல்லையென்றால் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

parents
parents

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த வயதான தம்பதி, மாவட்ட நீதிமன்றத்தில் வித்தியாசமான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். அதில், "தங்களது மகனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமானதாகவும், மகனும் மருமகளும் நொய்டாவில் தங்கி பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தனது மொத்த சேமிப்பையும் செலவழித்து மகனுக்கு அமெரிக்காவில் விமானியாக பயிற்சி அளித்ததாகவும், அவர் தற்போது முழுநேர வேலையில் மூழ்கி தங்களை மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வயதான காலத்தில் தாங்கள் தனியாக வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு பேரக்குழந்தைகளை பெற்றுத் தர மகனும் மருமகளும் எந்தவித முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

  • This case portrays the truth of society. We invest in our children, make them capable of working in good firms. Children owe their parents basic financial care. The parents have demanded either a grandchild within a year or compensation of Rs 5 crores: Advocate AK Srivastava pic.twitter.com/uH04Q8jEua

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனால், ஒராண்டுக்குள் மகனும் மருமகளும் தங்களுக்கு பேரன் அல்லது பேத்தியை பெற்றுத் தர வேண்டும், இல்லையென்றால் தாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மகனும் மருமகளும் தலா இரண்டரை கோடி ரூபாய் என ஐந்து கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்". இந்த மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த வயதான தம்பதி, மாவட்ட நீதிமன்றத்தில் வித்தியாசமான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். அதில், "தங்களது மகனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமானதாகவும், மகனும் மருமகளும் நொய்டாவில் தங்கி பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தனது மொத்த சேமிப்பையும் செலவழித்து மகனுக்கு அமெரிக்காவில் விமானியாக பயிற்சி அளித்ததாகவும், அவர் தற்போது முழுநேர வேலையில் மூழ்கி தங்களை மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வயதான காலத்தில் தாங்கள் தனியாக வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு பேரக்குழந்தைகளை பெற்றுத் தர மகனும் மருமகளும் எந்தவித முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

  • This case portrays the truth of society. We invest in our children, make them capable of working in good firms. Children owe their parents basic financial care. The parents have demanded either a grandchild within a year or compensation of Rs 5 crores: Advocate AK Srivastava pic.twitter.com/uH04Q8jEua

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனால், ஒராண்டுக்குள் மகனும் மருமகளும் தங்களுக்கு பேரன் அல்லது பேத்தியை பெற்றுத் தர வேண்டும், இல்லையென்றால் தாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மகனும் மருமகளும் தலா இரண்டரை கோடி ரூபாய் என ஐந்து கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்". இந்த மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.