ETV Bharat / bharat

"கோஹினூர் வைரம் பூரி ஜெகன்நாத பகவானுக்குச் சொந்தமானது" - உரிமை கொண்டாடும் ஒடிஷா அமைப்பு!

author img

By

Published : Sep 13, 2022, 5:01 PM IST

இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ள கோஹினூர் வைரம், பூரி ஜெகன்நாத் கோயிலுக்குச் சொந்தமானது என ஸ்ரீ ஜெகன்நாத் சேனா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Odisha
Odisha

ஒடிஷா: இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதையடுத்து, ஆட்சிப் பொறுப்பு அவரது மகன் சார்லஸிடம் வந்துள்ளது. எலிசபெத் மகாராணி அணிந்து வந்த, கோஹினூர் வைரம் பதித்த கிரீடம், சார்லஸின் மனைவி கமிலாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பதால், கடந்த சில நாட்களாக இந்தியர்கள் பலர் கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிஷா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்ரீ ஜெகன்நாத் சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக், கோஹினூர் வைரம் பூரி ஜெகன்நாத் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கோஹினூர் வைரம் ஸ்ரீ ஜெகன்நாத பகவானுக்கு சொந்தமானது. அது, இப்போது இங்கிலாந்தில் அரச குடும்பத்திடம் உள்ளது. பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானின் நாதிர் ஷாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றபோது, கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.

ரஞ்சித் சிங் 1839-ல் இறந்தார். அதன் பிறகு, கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் எடுத்துச்சென்றனர். மகாராஜா ரஞ்சித் சிங் இறப்பதற்கு முன், அவர் கோஹினூர் வைரத்தை ஜெகன்நாதருக்கு நன்கொடையாக அளித்ததாக உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிக்கு நாங்கள் கடிதம் அனுப்பினோம். அதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடம் நேரடியாக முறையிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: அரசே நாத்திகத்தை ஊக்குவிக்க முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஒடிஷா: இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதையடுத்து, ஆட்சிப் பொறுப்பு அவரது மகன் சார்லஸிடம் வந்துள்ளது. எலிசபெத் மகாராணி அணிந்து வந்த, கோஹினூர் வைரம் பதித்த கிரீடம், சார்லஸின் மனைவி கமிலாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பதால், கடந்த சில நாட்களாக இந்தியர்கள் பலர் கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிஷா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்ரீ ஜெகன்நாத் சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக், கோஹினூர் வைரம் பூரி ஜெகன்நாத் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கோஹினூர் வைரம் ஸ்ரீ ஜெகன்நாத பகவானுக்கு சொந்தமானது. அது, இப்போது இங்கிலாந்தில் அரச குடும்பத்திடம் உள்ளது. பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானின் நாதிர் ஷாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றபோது, கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.

ரஞ்சித் சிங் 1839-ல் இறந்தார். அதன் பிறகு, கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் எடுத்துச்சென்றனர். மகாராஜா ரஞ்சித் சிங் இறப்பதற்கு முன், அவர் கோஹினூர் வைரத்தை ஜெகன்நாதருக்கு நன்கொடையாக அளித்ததாக உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிக்கு நாங்கள் கடிதம் அனுப்பினோம். அதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடம் நேரடியாக முறையிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: அரசே நாத்திகத்தை ஊக்குவிக்க முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.