ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து சோபியான், அனந்த்பூர், பனிஹால், சுஞ்ச்வான் மற்றும் ஜம்மு உள்ளிட்ட 14 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
இரண்டு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக இந்த விசாரணை பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு பேருந்து நிலையில் 7 கிலோ வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக லஷ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹிதாயத்துல்லா மாலிக் கைது செய்யப்பட்டார். இவரை ஜம்மு காஷ்மீர் காவலர்கள் குஞ்ச்வானி பகுதியில் இவரை கைதுசெய்தனர். அப்போது ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததை அவர் ஒப்புகொண்டார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் இந்த அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மற்றொரு வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.
ஹிதாயத்துல்லா மாலிக் மீது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, புகலிடம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பேஸ்புக்கில் நேரலை: நடிகர் தீப் சிங் சித்துவிற்கு என்ஐஏ சம்மன்!