ETV Bharat / bharat

தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம் : மேற்கூரையின் தரத்தை பரிசோதித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை

author img

By

Published : Jan 5, 2021, 12:51 PM IST

உத்தரப் பிரதேசத்தில் தகன மேடை இடிந்து விழுந்த விபத்தில், கடமையை முறையாக செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரத்நகர் மாநகராட்சி கவுன்சில் தலைவர் விகாஸ் வலியுறுத்தியுள்ளளார்.

Muradnagar Municipal Council chairman Vikas Teotia
Muradnagar Municipal Council chairman Vikas Teotia

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர் பகுதியில் உள்ள தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

புதிதாக கட்டப்பட்ட இந்த மேற்கூரை 15 தினங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்ட நிலையில், அதன் தரத்தினை பரிசோதித்து அனுமதி வழங்கிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரத்நகர் மாநகராட்சி கவுன்சில் தலைவர் விகாஸ் டியோடியா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விகாஸ், "இது போன்ற விபத்தை நான் இதுவரை கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. குடும்பத்தினரை இழந்து வாடும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூரையினை தரமற்ற வகையில் கட்டியவர்கள் மீதும், அதனை பரிசோதித்து அனுமதி வழங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தற்போதுவரை இந்த விபத்து தொடர்பாக, கட்டுமான ஒப்பந்ததாரர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவி மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் என விகாஸ் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும் எனவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூவர் கைது!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர் பகுதியில் உள்ள தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

புதிதாக கட்டப்பட்ட இந்த மேற்கூரை 15 தினங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்ட நிலையில், அதன் தரத்தினை பரிசோதித்து அனுமதி வழங்கிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரத்நகர் மாநகராட்சி கவுன்சில் தலைவர் விகாஸ் டியோடியா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விகாஸ், "இது போன்ற விபத்தை நான் இதுவரை கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. குடும்பத்தினரை இழந்து வாடும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூரையினை தரமற்ற வகையில் கட்டியவர்கள் மீதும், அதனை பரிசோதித்து அனுமதி வழங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தற்போதுவரை இந்த விபத்து தொடர்பாக, கட்டுமான ஒப்பந்ததாரர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவி மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் என விகாஸ் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும் எனவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: காசியாபாத் துயரம்: ரூ.55 கோடியில் கட்டப்பட்ட தகன மேடை இடிந்து விழுந்த விவகாரத்தில் மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.