ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவைச் சேர்ந்த 3 வயது சிறுமி, கடந்த 21ஆம் தேதி தனது தாயுடன் திருமண விழாவுக்கு சென்றுள்ளார். திருமண விழாவில் ரமேஷ் தாகத் (30) என்ற நபர் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் பாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மறுநாள் திருமணம் நடந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து சிறுமியை உடலை மீட்டுள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகவும், இது உடற்கூராய்வில் உறுதி செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த ரமேஷ் தாகத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.