ETV Bharat / bharat

நாகாலாந்து, மேகாலாயா மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

author img

By

Published : Feb 27, 2023, 6:50 AM IST

சட்டப்பேரவை தேர்தல்
சட்டப்பேரவை தேர்தல்

சில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் முன்னாள் உள்துறை அமைச்சர் லிங்டோவின் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ஆளும் தேசிய மக்கள் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. முதல் அமைச்சர் கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்க்ள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. பிரசாரம் கடந்த 25ஆம் தேதி ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 3 ஆயிரத்து 419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 21 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏறத்தாழ 13 லட்சத்து 17 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகள் தயார் நிலையயில் உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து வரும் மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு!

சில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் முன்னாள் உள்துறை அமைச்சர் லிங்டோவின் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ஆளும் தேசிய மக்கள் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. முதல் அமைச்சர் கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்க்ள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. பிரசாரம் கடந்த 25ஆம் தேதி ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 3 ஆயிரத்து 419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 21 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏறத்தாழ 13 லட்சத்து 17 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகள் தயார் நிலையயில் உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து வரும் மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.