ETV Bharat / bharat

"காவிரியில் நீர் திறக்க தமிழ்நாடு அரசு வற்புறுத்த முடியாது" - உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்! - Karnataka govt to SC

Karnataka Govt filed affidavit in Delhi SC on Cauvery water issue: காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறந்துவிடக் கோரி தங்களை வற்புறுத்த முடியாது என கர்நாடக அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆக.24) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:44 PM IST

டெல்லி: காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கடந்த 10ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து 15 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இதனை பலத் தரப்பினரும் வெகுவாக வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, சில தினங்களிலேயே 10 கனஅடி நீராக குறைத்தது அம்மாநில அரசு. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்த மனுவில், 'ஆகஸ்ட் மாதத்திற்கான மீதமுள்ள நாட்களுக்கான தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டிம்எம்சி நீரை திறப்பதை அம்மாநில அரசு உறுதி செய்யவேண்டும், எஞ்சியுள்ள காலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் நீரை திறந்துவிடுவது குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மனுவை கடந்த ஆக.22-ல் அவசர மனுவாக விசாரிக்க கோரிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றார். இது தொடர்பான மனுக்களை அப்போது விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வுபெற்றதால் இம்மனுக்களை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முறையிட்டார். இந்த முறையீட்ட ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து கர்நாடகா தரப்பில் ஆஜராகிய அரசு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், 'மேகதாது விவகாரம் (Megathathu issue) தொடர்பாக, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என அவர் முறையிட்டார். இந்த நிலையில், அமைக்கப்பட உள்ள புதிய அமர்வு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

அதன்படி, காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வில் நாளை (ஆக.25) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கர்நாடக அரசு, சாதரணமாக ஒரு ஆண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நீரை கடந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி, ஜூலையில் 45.95 டிஎம்சி என உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அதோடு இதற்காக கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முக்கியமான மூன்று நீர்ப்பாசனங்களின் அடிப்படையில் கர்நாடகத்தின் குறைந்தபட்ச பயிர்களுக்கான நீர்த் தேவை சுமார் 140 டி.எம்.சி என்றும் எனவே, கர்நாடகாவில் உள்ள பயிர்களுக்கும், பெங்களூரு மாநகரம் உள்ளிட்டவைகள் மற்றும் கிராமங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போது சேமித்துள்ள நீரும் வரக்கூடிய நீரின் அளவும் போதியதாக இல்லை என்றும் அதில் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவின் நலனை பாதுகாப்பதில் சமரசத்துக்கு இடமில்லை - டி.கே.சிவகுமார்

டெல்லி: காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கடந்த 10ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து 15 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இதனை பலத் தரப்பினரும் வெகுவாக வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, சில தினங்களிலேயே 10 கனஅடி நீராக குறைத்தது அம்மாநில அரசு. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்த மனுவில், 'ஆகஸ்ட் மாதத்திற்கான மீதமுள்ள நாட்களுக்கான தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டிம்எம்சி நீரை திறப்பதை அம்மாநில அரசு உறுதி செய்யவேண்டும், எஞ்சியுள்ள காலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் நீரை திறந்துவிடுவது குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மனுவை கடந்த ஆக.22-ல் அவசர மனுவாக விசாரிக்க கோரிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றார். இது தொடர்பான மனுக்களை அப்போது விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வுபெற்றதால் இம்மனுக்களை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முறையிட்டார். இந்த முறையீட்ட ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து கர்நாடகா தரப்பில் ஆஜராகிய அரசு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், 'மேகதாது விவகாரம் (Megathathu issue) தொடர்பாக, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என அவர் முறையிட்டார். இந்த நிலையில், அமைக்கப்பட உள்ள புதிய அமர்வு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.

அதன்படி, காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வில் நாளை (ஆக.25) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கர்நாடக அரசு, சாதரணமாக ஒரு ஆண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நீரை கடந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி, ஜூலையில் 45.95 டிஎம்சி என உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அதோடு இதற்காக கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முக்கியமான மூன்று நீர்ப்பாசனங்களின் அடிப்படையில் கர்நாடகத்தின் குறைந்தபட்ச பயிர்களுக்கான நீர்த் தேவை சுமார் 140 டி.எம்.சி என்றும் எனவே, கர்நாடகாவில் உள்ள பயிர்களுக்கும், பெங்களூரு மாநகரம் உள்ளிட்டவைகள் மற்றும் கிராமங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போது சேமித்துள்ள நீரும் வரக்கூடிய நீரின் அளவும் போதியதாக இல்லை என்றும் அதில் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவின் நலனை பாதுகாப்பதில் சமரசத்துக்கு இடமில்லை - டி.கே.சிவகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.