ETV Bharat / bharat

"சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்; தரையிறங்குவதிலும் பிரச்னை இருக்காது" - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் நம்பிக்கை!

author img

By

Published : Jul 14, 2023, 11:53 AM IST

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்றும், இத்திட்டம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக மாறும் என்றும் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் இன்று(ஜூலை 14) விண்ணில் ஏவப்படவுள்ளது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பகல் 1 மணிக்குத் தொடங்கியது. சுமார் ரூ.615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-1 திட்டத்தின் ஏவுகணை அங்கீகார வாரியத் தலைவரான எம்.சி.தத்தன் சந்திரயான்-3 திட்டம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சந்திராயன்-1 திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சந்திரயான்-2 திட்டம் 90 சதவீதம் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாம் நிறைய கற்றுக் கொண்டோம். முந்தையை இரு திட்டங்களில் இருந்தும் பல படிப்பினைகள் கிடைத்தால், சந்திரயான்-3 திட்டத்தில் அனைத்தும் சரியாக செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3-ல் ஆர்பிட்டர் இல்லை. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து தரவுகளைப் பெறுகிறோம். அதே ஆர்பிட்டர்தான் சந்திரயான் 3-க்கும் பயன்படுத்தப்படும்.

சந்திரயான்-3 விண்கலத்தில் இரண்டு மாட்யூல்கள் உள்ளன. ஒன்று ப்ரோபோஷன் மாட்யூல் மற்றொன்று, லேண்டர்-ரோவர் மாட்யூல். ப்ரோபோஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் பிரிந்ததும் அது நிலவின் மேற்பரப்பை நோக்கிச் செல்லும். அதுதான் மிகவும் முக்கியமான தருணம். அப்போது லேண்டரை சரியாக கட்டுப்படுத்தி தரையிறக்க வேண்டும்.

கடந்த முறை லேண்டரை கட்டுப்படுத்துவதில்தான் பிரச்னை ஏற்பட்டது. இந்த முறை, லேண்டரை கட்டுப்படுத்தி சிறப்பான செயல்முறை உள்ளது. அதன் மூலம் லேண்டரின் வேகம், உந்துவிசை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும். கார் உள்ளிட்ட பிற இன்ஜின்களைப் போல லேண்டரை கட்டுப்படுத்தலாம். இதனால், லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சீராக தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முறை கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இஸ்ரோவின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி ராமகிருஷ்ண நாகரி, சந்திரயான்-3 திட்டம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், "சந்திரயான்-2 திட்டத்தின் பகுதியளவு வெற்றிக்குப் பிறகு இஸ்ரோ சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இஸ்ரோவிற்கு இந்தப் பணி மிகவும் முக்கியமானது. சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்தது. ஆனால், இம்முறை லேண்டர் சரியாக தரையிறங்கும், இத்திட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "நான் கடந்த 1971ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தபோது, இதுபோன்ற விண்வெளித் திட்டங்களால் சாமானிய மக்களுக்கு என்ன பயன்? என்று பலர் கேட்டனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாக பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, அதன் மூலம் வணிக ரீதியாகவும், ராணுவ தேவைகளுக்காகவும் இஸ்ரோ தனது பங்களிப்பை வழங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதேபோல், இந்த திட்டமும் பெரிய அளவில் மக்களுக்குப் பயன்படும்.

கார்கில் போராட்டத்தின்போது இஸ்ரோ ராணுவ துருப்புகளின் நடவடிக்கை தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கியது. அதேபோல், தொலைத்தொடர்புத் துறை, வானிலை ஆய்வுத்துறை உள்ளிட்டவையும் இஸ்ரோவால் பயனடைந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஒருநாள் அவர்களுக்கு இணையாக இந்தியா உயர்ந்து, வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திராயன் - 3 குறித்த முழு விபரம்!

ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் இன்று(ஜூலை 14) விண்ணில் ஏவப்படவுள்ளது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பகல் 1 மணிக்குத் தொடங்கியது. சுமார் ரூ.615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-1 திட்டத்தின் ஏவுகணை அங்கீகார வாரியத் தலைவரான எம்.சி.தத்தன் சந்திரயான்-3 திட்டம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சந்திராயன்-1 திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சந்திரயான்-2 திட்டம் 90 சதவீதம் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாம் நிறைய கற்றுக் கொண்டோம். முந்தையை இரு திட்டங்களில் இருந்தும் பல படிப்பினைகள் கிடைத்தால், சந்திரயான்-3 திட்டத்தில் அனைத்தும் சரியாக செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3-ல் ஆர்பிட்டர் இல்லை. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து தரவுகளைப் பெறுகிறோம். அதே ஆர்பிட்டர்தான் சந்திரயான் 3-க்கும் பயன்படுத்தப்படும்.

சந்திரயான்-3 விண்கலத்தில் இரண்டு மாட்யூல்கள் உள்ளன. ஒன்று ப்ரோபோஷன் மாட்யூல் மற்றொன்று, லேண்டர்-ரோவர் மாட்யூல். ப்ரோபோஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் பிரிந்ததும் அது நிலவின் மேற்பரப்பை நோக்கிச் செல்லும். அதுதான் மிகவும் முக்கியமான தருணம். அப்போது லேண்டரை சரியாக கட்டுப்படுத்தி தரையிறக்க வேண்டும்.

கடந்த முறை லேண்டரை கட்டுப்படுத்துவதில்தான் பிரச்னை ஏற்பட்டது. இந்த முறை, லேண்டரை கட்டுப்படுத்தி சிறப்பான செயல்முறை உள்ளது. அதன் மூலம் லேண்டரின் வேகம், உந்துவிசை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும். கார் உள்ளிட்ட பிற இன்ஜின்களைப் போல லேண்டரை கட்டுப்படுத்தலாம். இதனால், லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சீராக தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முறை கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இஸ்ரோவின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி ராமகிருஷ்ண நாகரி, சந்திரயான்-3 திட்டம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், "சந்திரயான்-2 திட்டத்தின் பகுதியளவு வெற்றிக்குப் பிறகு இஸ்ரோ சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இஸ்ரோவிற்கு இந்தப் பணி மிகவும் முக்கியமானது. சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்தது. ஆனால், இம்முறை லேண்டர் சரியாக தரையிறங்கும், இத்திட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "நான் கடந்த 1971ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தபோது, இதுபோன்ற விண்வெளித் திட்டங்களால் சாமானிய மக்களுக்கு என்ன பயன்? என்று பலர் கேட்டனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாக பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, அதன் மூலம் வணிக ரீதியாகவும், ராணுவ தேவைகளுக்காகவும் இஸ்ரோ தனது பங்களிப்பை வழங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதேபோல், இந்த திட்டமும் பெரிய அளவில் மக்களுக்குப் பயன்படும்.

கார்கில் போராட்டத்தின்போது இஸ்ரோ ராணுவ துருப்புகளின் நடவடிக்கை தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கியது. அதேபோல், தொலைத்தொடர்புத் துறை, வானிலை ஆய்வுத்துறை உள்ளிட்டவையும் இஸ்ரோவால் பயனடைந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஒருநாள் அவர்களுக்கு இணையாக இந்தியா உயர்ந்து, வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திராயன் - 3 குறித்த முழு விபரம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.