ETV Bharat / bharat

கரோனா நிலவரம்: நாட்டில் ஒரேநாளில் 18,327 பேர் பாதிப்பு

author img

By

Published : Mar 6, 2021, 12:10 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 327 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 108 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

COVID-19 infections
கரோனா நிலவரம்

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 327 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 108 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 நிலவரம்

நாட்டில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 92 ஆயிரத்து 88 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 304 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 656 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 14 ஆயிரத்து 234 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 128 பேர் குணமடைந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 935 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 22 கோடியே ஆறு லட்சத்து 92 ஆயிரத்து 677 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மக்களே உஷார்! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 327 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 108 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 நிலவரம்

நாட்டில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 92 ஆயிரத்து 88 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 304 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 656 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 14 ஆயிரத்து 234 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 128 பேர் குணமடைந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 935 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 22 கோடியே ஆறு லட்சத்து 92 ஆயிரத்து 677 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மக்களே உஷார்! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.