ETV Bharat / bharat

கரோனா: ஒரேநாளில் இந்தியாவில் 62,000 பாதிப்பு: 1,587 உயிரிழப்பு

author img

By

Published : Jun 18, 2021, 10:32 AM IST

இந்தியாவில் சுமார் 73 நாள்களுக்குப் பின்னர், கரோனா தொற்றால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் கீழ் குறைவாகப் பதிவாகியுள்ளது.

corona
இந்தியாவில் 62 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 480 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 97 லட்சத்து 62 ஆயிரத்து 793ஆக உள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரளாவில் நேற்று (ஜூன் 17) ஒரேநாளில் 12 ஆயிரத்து 469 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும்.

அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு, ஒன்பதாயிரத்து 830 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 17) மட்டும் 1,587 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 85 லட்சத்து 80 ஆயிரத்து 647 ஆக உள்ளது. தற்போது ஏழு லட்சத்து 98 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

இதுவரை, மொத்தம் 26 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 399 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: துபாயில் தாய் மரணம்... தந்தையை தேடி விமானத்தில் வந்த 11 மாத குழந்தை!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 480 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 97 லட்சத்து 62 ஆயிரத்து 793ஆக உள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரளாவில் நேற்று (ஜூன் 17) ஒரேநாளில் 12 ஆயிரத்து 469 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும்.

அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு, ஒன்பதாயிரத்து 830 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 17) மட்டும் 1,587 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 85 லட்சத்து 80 ஆயிரத்து 647 ஆக உள்ளது. தற்போது ஏழு லட்சத்து 98 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

இதுவரை, மொத்தம் 26 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 399 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: துபாயில் தாய் மரணம்... தந்தையை தேடி விமானத்தில் வந்த 11 மாத குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.