ETV Bharat / bharat

சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்புத்தாய் கைது

author img

By

Published : Jul 14, 2022, 7:41 PM IST

லக்னோவில் உணவு கேட்டதற்காக 6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடான எண்ணெய்யை ஊற்றிய வளர்ப்புத்தாயை போலீசார் கைது செய்தனர்.

mother
mother

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தோட் - பூனம் தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமியை தத்தெடுத்துள்ளனர்.

இது அஜய் ரத்தோடின் மனைவிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஜய் ரத்தோட் தனது மனைவியிடம் கேட்டபோது, சூடான டீ தவறுதலாக சிறுமி மீது கொட்டிவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, தாயார் சூடான எண்ணெய்யை எடுத்து, தனது அந்தரங்க உறுப்பில் ஊற்றிவிட்டார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிட்டதால், அஜய் ரத்தோடின் மனைவி பூனம், தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வளர்ப்பு மகளை மருத்துவமனையில் அனுமதித்த அஜய் ரத்தோட், மனைவி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரத்தோடின் மனைவியை கைது செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஷத்ரோஹன் கூறுகையில், "சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும், அவளை காணச் சென்றேன். உணவு கேட்டதற்காக, தாயார் தன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டதாக சிறுமி கூறினாள்.

அன்று மட்டுமல்லாமல், தத்தெடுத்தது முதலே தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக சிறுமி கூறினாள். கடந்த 5 மாதங்களாக பூனம் எந்தவித காரணமும் இன்றி சிறுமியை அடித்துள்ளார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி...

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தோட் - பூனம் தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமியை தத்தெடுத்துள்ளனர்.

இது அஜய் ரத்தோடின் மனைவிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஜய் ரத்தோட் தனது மனைவியிடம் கேட்டபோது, சூடான டீ தவறுதலாக சிறுமி மீது கொட்டிவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, தாயார் சூடான எண்ணெய்யை எடுத்து, தனது அந்தரங்க உறுப்பில் ஊற்றிவிட்டார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிட்டதால், அஜய் ரத்தோடின் மனைவி பூனம், தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வளர்ப்பு மகளை மருத்துவமனையில் அனுமதித்த அஜய் ரத்தோட், மனைவி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரத்தோடின் மனைவியை கைது செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஷத்ரோஹன் கூறுகையில், "சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும், அவளை காணச் சென்றேன். உணவு கேட்டதற்காக, தாயார் தன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டதாக சிறுமி கூறினாள்.

அன்று மட்டுமல்லாமல், தத்தெடுத்தது முதலே தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக சிறுமி கூறினாள். கடந்த 5 மாதங்களாக பூனம் எந்தவித காரணமும் இன்றி சிறுமியை அடித்துள்ளார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.