ETV Bharat / bharat

வாட்ஸ்அப் குழு அட்மினின் நாக்கு துண்டிப்பு - குழுவை விட்டு நீக்கியதால் வெறிச்செயல்!

author img

By

Published : Jan 3, 2023, 8:45 PM IST

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதற்காக குழு அட்மினை, 5 பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி நாக்கை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த பர்சங்கி பகுதியைச் சேர்ந்தவர், தன் வீட்டு அருகே உள்ளவர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி உள்ளார். நாளடைவில் வாட்ஸ்அப் குழுவில் யாரும் மெசேஜ்களை பகிராததால் அதில் இருந்தவர்களை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த குழுவில் இருந்த ஒருவர், தன்னை நீக்கியதற்கான காரணத்தைக் கேட்டு அட்மினுக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு வாட்ஸ்அப் குழுவின் அட்மின் பதிலளிக்காத நிலையில், அவரை நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட நிலையில் வாட்ஸ்அப் குழு அட்மினுக்கும், நீக்கப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குழுவை விட்டு விலக்கியதற்கு உரிய காரணம் சொல்லக்கோரி, நீக்கப்பட்டவர் கேட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் கைகலப்பிற்கு மாறிய நிலையில், குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் தன்னுடன் அழைத்து வந்த ஐந்து பேரை கொண்டு அட்மீனை நையப் புடைத்துள்ளார். மேலும் 5 பேரும் சரமாரியாக தாக்கியதில் வாட்ஸ்அப் குழுவின் அட்மினின் நாக்கு துண்டிக்கப்பட்டது.

அட்மின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாக்கில் தையல் போடட்டப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது மனைவி அளித்தப் புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி இளம்பெண் கொலை: டூவீலரில் இருந்த மற்றொரு பெண் யார்? - பகீர் கிளப்பும் பின்னணி

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த பர்சங்கி பகுதியைச் சேர்ந்தவர், தன் வீட்டு அருகே உள்ளவர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி உள்ளார். நாளடைவில் வாட்ஸ்அப் குழுவில் யாரும் மெசேஜ்களை பகிராததால் அதில் இருந்தவர்களை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த குழுவில் இருந்த ஒருவர், தன்னை நீக்கியதற்கான காரணத்தைக் கேட்டு அட்மினுக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு வாட்ஸ்அப் குழுவின் அட்மின் பதிலளிக்காத நிலையில், அவரை நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட நிலையில் வாட்ஸ்அப் குழு அட்மினுக்கும், நீக்கப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குழுவை விட்டு விலக்கியதற்கு உரிய காரணம் சொல்லக்கோரி, நீக்கப்பட்டவர் கேட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் கைகலப்பிற்கு மாறிய நிலையில், குழுவில் இருந்து நீக்கப்பட்டவர் தன்னுடன் அழைத்து வந்த ஐந்து பேரை கொண்டு அட்மீனை நையப் புடைத்துள்ளார். மேலும் 5 பேரும் சரமாரியாக தாக்கியதில் வாட்ஸ்அப் குழுவின் அட்மினின் நாக்கு துண்டிக்கப்பட்டது.

அட்மின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாக்கில் தையல் போடட்டப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது மனைவி அளித்தப் புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி இளம்பெண் கொலை: டூவீலரில் இருந்த மற்றொரு பெண் யார்? - பகீர் கிளப்பும் பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.