ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா. இவர் பஞ்சாயத்துத் தேர்தலில் வார்டு உறுப்பினராகப் போட்டியிடும் மகளுக்கு வாக்களிக்க அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார்.
வாக்களித்த சந்தோஷத்துடன் வெளியே வந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, குடும்பத்தினர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்,மருத்துவமனை செல்லும் வழியிலேயே கங்கப்பா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகளுக்கு சீர்வரிசை வாங்கப் பணமில்லாததால் தாய் எடுத்த விபரீத முடிவு!