ETV Bharat / bharat

நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

author img

By

Published : Jul 21, 2022, 10:51 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று, நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டின் 15 வது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!
நாட்டின் 15 வது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

டெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது.

நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். விழுக்காடு அடிப்படையில், திரெளபதி முர்மு 64.03 விழுக்காடு வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.

இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, 15 எம்.பி.க்கள் உட்பட 53 வாக்காளர்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை நேரடியாக பூங்கொத்து வழங்கி தெரிவித்துள்ளார்.

  • India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President!

    Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.

    — Narendra Modi (@narendramodi) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="

India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President!

Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.

— Narendra Modi (@narendramodi) July 21, 2022 ">

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரெளபதி முர்முவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளர்.

  • Hearty congratulations to Hon'ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the oppressed sections of the society, we strongly believe that you will stand by silenced voices to ensure a thriving constitutional democracy. pic.twitter.com/vbQnPReb19

    — M.K.Stalin (@mkstalin) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது.

நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். விழுக்காடு அடிப்படையில், திரெளபதி முர்மு 64.03 விழுக்காடு வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.

இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, 15 எம்.பி.க்கள் உட்பட 53 வாக்காளர்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை நேரடியாக பூங்கொத்து வழங்கி தெரிவித்துள்ளார்.

  • India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President!

    Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.

    — Narendra Modi (@narendramodi) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரெளபதி முர்முவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளர்.

  • Hearty congratulations to Hon'ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the oppressed sections of the society, we strongly believe that you will stand by silenced voices to ensure a thriving constitutional democracy. pic.twitter.com/vbQnPReb19

    — M.K.Stalin (@mkstalin) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.