ETV Bharat / bharat

"கடினமான நேரத்தில் என்னை அணுகியவர்" - 'கேப்டன் கூல்' தோனி குறித்து கோலி உருக்கம்

author img

By

Published : Feb 25, 2023, 7:03 PM IST

கடினமான காலத்தில் என்னை அணுகி உறுதுணையாக இருந்தவர் தோனி மட்டும்தான் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி  தோனி
விராட் கோலி தோனி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பல ஜாம்பவான்களை கண்டுள்ளது. அந்த வகையில், "கேப்டன் கூல்" என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கும், விராட் கோலிக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இருவரும் இந்திய அணியின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். நோக்கம் அணிக்கு வெற்றி தேடி தருவதாக இருந்தாலும், பரபரப்பான நேரங்களில் தோனி அமைதியாக செயல்படுவார். கோலியோ விறுவிறுப்புடன் இருப்பார். இது அவர்களுக்கான பிரத்யேக பாணி.

கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் முடிந்தபின், திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கோலி. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை ஏற்காமல் சாதாரண வீரராகவே விளையாடுகிறார். கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தவித்த அவர், மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற கோலி, தோனி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "எனக்கு ஏற்பட்ட கடினமான நேரத்தில் அந்த சூழலில் மனைவி அனுஷ்கா சர்மா, சிறுவயது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரை தவிர, என்னை அணுகிய ஒரே நபர் தோனி மட்டும் தான். அவர் தான் என்னை முதலில் அணுகினார்.

தோனியை எளிதில் தொடர்பு கொண்டுவிட முடியாது. தினமும் அவருக்கு போன் செய்தால் 99 சதவீதம் போனை எடுக்க மாட்டார். ஏனென்றால், பெரும்பாலும் அவர் செல்போனை பார்ப்பதே இல்லை. நான் கடினமான நேரத்தில் இருந்த போது எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் 'நீங்கள் வலிமையானவராக அறியப்படும் போதும் உங்களிடம், நலம் விசாரிக்க எல்லோரும் மறந்துவிடுவார்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து எனக்குள் தாக்கத்தை உருவாக்கியது.

எல்லோரும் என்னை துணிச்சலானவர், வலிமையானவர் என அறிகின்றனர். எனினும் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் இரண்டு அடி பின்னால் சென்று பார்க்க வேண்டும். அது பின்னடைவு இல்லை. தோனிக்கு எனது நிலை நன்றாகவே புரியும். ஏனென்றால் அவரும் இதை கடந்துதான் வந்திருக்கிறார்" என கூறியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2019 வரை 11 ஆண்டுகள், தோனியுடன் விராட் கோலி இணைந்து விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா - ஜெர்மனி நல்லுறவு மேலும் வலுப்படும்: ஜெர்மனி பிரதமர்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பல ஜாம்பவான்களை கண்டுள்ளது. அந்த வகையில், "கேப்டன் கூல்" என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கும், விராட் கோலிக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இருவரும் இந்திய அணியின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். நோக்கம் அணிக்கு வெற்றி தேடி தருவதாக இருந்தாலும், பரபரப்பான நேரங்களில் தோனி அமைதியாக செயல்படுவார். கோலியோ விறுவிறுப்புடன் இருப்பார். இது அவர்களுக்கான பிரத்யேக பாணி.

கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் முடிந்தபின், திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கோலி. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை ஏற்காமல் சாதாரண வீரராகவே விளையாடுகிறார். கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தவித்த அவர், மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற கோலி, தோனி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "எனக்கு ஏற்பட்ட கடினமான நேரத்தில் அந்த சூழலில் மனைவி அனுஷ்கா சர்மா, சிறுவயது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரை தவிர, என்னை அணுகிய ஒரே நபர் தோனி மட்டும் தான். அவர் தான் என்னை முதலில் அணுகினார்.

தோனியை எளிதில் தொடர்பு கொண்டுவிட முடியாது. தினமும் அவருக்கு போன் செய்தால் 99 சதவீதம் போனை எடுக்க மாட்டார். ஏனென்றால், பெரும்பாலும் அவர் செல்போனை பார்ப்பதே இல்லை. நான் கடினமான நேரத்தில் இருந்த போது எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் 'நீங்கள் வலிமையானவராக அறியப்படும் போதும் உங்களிடம், நலம் விசாரிக்க எல்லோரும் மறந்துவிடுவார்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து எனக்குள் தாக்கத்தை உருவாக்கியது.

எல்லோரும் என்னை துணிச்சலானவர், வலிமையானவர் என அறிகின்றனர். எனினும் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் இரண்டு அடி பின்னால் சென்று பார்க்க வேண்டும். அது பின்னடைவு இல்லை. தோனிக்கு எனது நிலை நன்றாகவே புரியும். ஏனென்றால் அவரும் இதை கடந்துதான் வந்திருக்கிறார்" என கூறியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2019 வரை 11 ஆண்டுகள், தோனியுடன் விராட் கோலி இணைந்து விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா - ஜெர்மனி நல்லுறவு மேலும் வலுப்படும்: ஜெர்மனி பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.