ETV Bharat / bharat

பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேர் கைது

author img

By

Published : May 16, 2021, 3:27 PM IST

பிரமதர் நரேந்திர மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டிய 25 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்ட செயல்பாட்டை விமர்சிக்கும் விதமாக அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

"நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பினீர்கள் மோடிஜீ?" என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட 25 நபர்கள் மீது இ.பி.கோ. 188, 3 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய நபர்களை டெல்லி காவல்துறையினர் சி.சி.டி.வி. பதிவுகள் வாயிலாகத் தேடிவருவதாகவும், அவர்கள் பிடிபடும்பட்சத்தில் அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ’கரோனா மரணங்களை மறைக்கிறதா குஜராத் அரசு...’ பரபரப்பைக் கிளப்பும் ப.சிதம்பரம்!

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டிய 25 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்ட செயல்பாட்டை விமர்சிக்கும் விதமாக அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

"நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பினீர்கள் மோடிஜீ?" என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட 25 நபர்கள் மீது இ.பி.கோ. 188, 3 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய நபர்களை டெல்லி காவல்துறையினர் சி.சி.டி.வி. பதிவுகள் வாயிலாகத் தேடிவருவதாகவும், அவர்கள் பிடிபடும்பட்சத்தில் அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ’கரோனா மரணங்களை மறைக்கிறதா குஜராத் அரசு...’ பரபரப்பைக் கிளப்பும் ப.சிதம்பரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.