ETV Bharat / bharat

'பன்மடங்கு அதிகரித்த கரோனா தடுப்பூசி உற்பத்தி!'

author img

By

Published : Aug 7, 2021, 2:12 PM IST

கரோனா தடுப்பூசியின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 40 லட்சமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி உற்பத்தி
கரோனா தடுப்பூசி உற்பத்தி

கரோனா தொற்றுக்குத் தகுதியுள்ள நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த, நாள் ஒன்றுக்கு 2.5 லட்சமாக இருந்த தடுப்பூசி உற்பத்தி 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனை முயற்சிகள் நடந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், "ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.

இது உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்குச் சிறப்பான முறையில் தடுப்பூசி செலுத்த உதவும் என நம்புகிறேன்" என்றார்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ள நிலையில் அதற்காகத் தான் பெருமைப்படுவதாக பாரதி தெரிவித்தார். ஊடகங்கள் வாயிலாகத் தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

தடுப்பூசி செயல்திறன், நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

கரோனா தொற்றுக்குத் தகுதியுள்ள நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த, நாள் ஒன்றுக்கு 2.5 லட்சமாக இருந்த தடுப்பூசி உற்பத்தி 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனை முயற்சிகள் நடந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், "ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.

இது உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்குச் சிறப்பான முறையில் தடுப்பூசி செலுத்த உதவும் என நம்புகிறேன்" என்றார்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ள நிலையில் அதற்காகத் தான் பெருமைப்படுவதாக பாரதி தெரிவித்தார். ஊடகங்கள் வாயிலாகத் தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

தடுப்பூசி செயல்திறன், நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.