ETV Bharat / bharat

இந்தியாவில் 82 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

author img

By

Published : Nov 2, 2020, 2:00 PM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 230 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19 India
COVID-19 India

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 29 ஆயிரத்து 313 ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 22 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 5 லட்சத்து 61 ஆயிரம் 908 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 11 கோடி 07 லட்சத்து 43 ஆயிரத்து 103 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று( அக்-31) ஒரே நாளில் 8 லட்சத்து 55 ஆயிரத்து 800 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 29 ஆயிரத்து 313 ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 22 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 5 லட்சத்து 61 ஆயிரம் 908 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 11 கோடி 07 லட்சத்து 43 ஆயிரத்து 103 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று( அக்-31) ஒரே நாளில் 8 லட்சத்து 55 ஆயிரத்து 800 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.