ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கரோனா!

author img

By

Published : May 5, 2021, 4:14 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 780 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரேநாளில் 3லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கரோனா!
இந்தியாவில் ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவும் கரோனா காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் கரோனாவை இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இருப்பினும் இதுவரை முழு ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில் மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கரோனாவுக்கு 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்த நிலையில் கரோனாவுக்கு உயிரழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731ஆக அதிகரித்துள்ள நிலையில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலங்களில் கரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவும் கரோனா காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் கரோனாவை இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இருப்பினும் இதுவரை முழு ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில் மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கரோனாவுக்கு 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்த நிலையில் கரோனாவுக்கு உயிரழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731ஆக அதிகரித்துள்ள நிலையில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலங்களில் கரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.