ETV Bharat / bharat

16 நாள்களில் 13 மடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 6, 2020, 7:07 AM IST

டெல்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு நவம்பர் 19ஆம் தேதிமுதல் கடந்த 16 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையை 13 மடங்கு அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

petrol
petrol

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்திய எண்ணெய்க் கழகம் சமீபத்தில் மானியமில்லாத திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலையை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி போன்ற விலைகளை மீண்டும் மீண்டும் அநியாயமாக அதிகரிப்பது இந்திய மக்களுக்குத் தீர்க்கமுடியாத வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1. மே, 2014ஆம் ஆண்டு (பாஜக ஆட்சியைப் பிடித்தபோது), பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.20 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 3.46 ரூபாய் ஆகவும் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு கூடுதலாக 23.78 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 28.37 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. டீசல் மீதான கலால் வரி 820 விழுக்காடும், பெட்ரோல் மீதான கலால் வரி 258 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மட்டும் அதிகரிப்பதன் மூலம் கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

3. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட எட்டு மாதத்தில், விலை மென்மேலும் அதிகரிப்பதன் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல், லாபம் ஈட்டுதல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அனைத்து வகையான சுரண்டல்களையும் தாண்டிவிட்டது. மார்ச் 5ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்தது. மே 5ஆம் தேதி, மோடி அரசு டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயாகவும் உயர்த்தியது.

4. டிசம்பர் 3ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 48.18 ரூபாய், அமெரிக்க டாலர் அல்லது ஒரு பீப்பாய்க்கு 3,560.46 ரூபாய். ஒரு பீப்பாயில் 159 லிட்டர் உள்ளது. எனவே, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை லிட்டருக்கு 22.39 ரூபாய். இதற்கு எதிராக, பெட்ரோல்-டீசலின் விலை 83 ரூபாய் மோடி அரசாங்கத்தால் இந்திய மக்களைச் சுரண்டி, லிட்டருக்கு 73 ரூபாய் விற்பனையாகிறது.

5. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 71.41 ரூபாயாக இருந்தது. டீசல் 55.49 ஆக இருந்தது. அவை டெல்லியில் 83.13 ரூபாய், 73.32 ரூபாயாக உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை டிசம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி பீப்பாய்க்கு 48.18 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது என்று நாம் கருதினால், அதாவது 56 விழுக்காடு சரிந்து, பாஜக அரசு பெட்ரோல்-டீசல் விலையை வான் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

காங்கிரசின் கோரிக்கை

1. குறைக்கப்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், அதற்கேற்ப பெட்ரோல்-டீசல்-எல்பிஜி எரிவாயு விகிதங்களைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கைவைக்கிறது.

2. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்.

3. மார்ச் 5ஆம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மற்றும் கலால் வரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவும், இந்த கடினமான காலங்களில் இந்திய மக்களுக்கு இந்த நன்மையை வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்திய எண்ணெய்க் கழகம் சமீபத்தில் மானியமில்லாத திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலையை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி போன்ற விலைகளை மீண்டும் மீண்டும் அநியாயமாக அதிகரிப்பது இந்திய மக்களுக்குத் தீர்க்கமுடியாத வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1. மே, 2014ஆம் ஆண்டு (பாஜக ஆட்சியைப் பிடித்தபோது), பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.20 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 3.46 ரூபாய் ஆகவும் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு கூடுதலாக 23.78 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 28.37 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. டீசல் மீதான கலால் வரி 820 விழுக்காடும், பெட்ரோல் மீதான கலால் வரி 258 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மட்டும் அதிகரிப்பதன் மூலம் கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

3. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட எட்டு மாதத்தில், விலை மென்மேலும் அதிகரிப்பதன் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல், லாபம் ஈட்டுதல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அனைத்து வகையான சுரண்டல்களையும் தாண்டிவிட்டது. மார்ச் 5ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்தது. மே 5ஆம் தேதி, மோடி அரசு டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயாகவும் உயர்த்தியது.

4. டிசம்பர் 3ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 48.18 ரூபாய், அமெரிக்க டாலர் அல்லது ஒரு பீப்பாய்க்கு 3,560.46 ரூபாய். ஒரு பீப்பாயில் 159 லிட்டர் உள்ளது. எனவே, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை லிட்டருக்கு 22.39 ரூபாய். இதற்கு எதிராக, பெட்ரோல்-டீசலின் விலை 83 ரூபாய் மோடி அரசாங்கத்தால் இந்திய மக்களைச் சுரண்டி, லிட்டருக்கு 73 ரூபாய் விற்பனையாகிறது.

5. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 71.41 ரூபாயாக இருந்தது. டீசல் 55.49 ஆக இருந்தது. அவை டெல்லியில் 83.13 ரூபாய், 73.32 ரூபாயாக உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை டிசம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி பீப்பாய்க்கு 48.18 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது என்று நாம் கருதினால், அதாவது 56 விழுக்காடு சரிந்து, பாஜக அரசு பெட்ரோல்-டீசல் விலையை வான் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

காங்கிரசின் கோரிக்கை

1. குறைக்கப்பட்ட சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், அதற்கேற்ப பெட்ரோல்-டீசல்-எல்பிஜி எரிவாயு விகிதங்களைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கைவைக்கிறது.

2. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்.

3. மார்ச் 5ஆம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மற்றும் கலால் வரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவும், இந்த கடினமான காலங்களில் இந்திய மக்களுக்கு இந்த நன்மையை வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.