ETV Bharat / bharat

தெலங்கானாவில் கனமழை: 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தெலங்கானாவில் கனமழை காரணமாக நாளை முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 10, 2022, 8:05 PM IST

முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று (ஜூலை 10) உயர் அலுவலர்களுடன் மழை நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சோமேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தினார். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் சிறப்பு முகாம்களுக்கு மாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சாலைகளில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கனமழை எச்சரிக்கை

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் 35 செ.மீ மழையும், மஞ்சேரியலில் 25 செ.மீ மழையும், நிஜாமாபாத்தில் 24 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், நாளை(ஜூலை 11) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 12) பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக அடிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், மாஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Video: கொட்டும் மழையில் சாலை பணி: 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

ஹைதராபாத்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று (ஜூலை 10) உயர் அலுவலர்களுடன் மழை நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சோமேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தினார். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் சிறப்பு முகாம்களுக்கு மாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சாலைகளில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கனமழை எச்சரிக்கை

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் 35 செ.மீ மழையும், மஞ்சேரியலில் 25 செ.மீ மழையும், நிஜாமாபாத்தில் 24 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், நாளை(ஜூலை 11) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 12) பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக அடிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், மாஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Video: கொட்டும் மழையில் சாலை பணி: 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.