ETV Bharat / bharat

கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை விவகாரம்... பேருந்து சேவைகள் நிறுத்தம்...

author img

By

Published : Nov 25, 2022, 5:49 PM IST

கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை விவகாரம் நீடித்துவருவதால் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் பேருந்து சேவைகள் நிறுத்தம்
கர்நாடகாவில் பேருந்து சேவைகள் நிறுத்தம்

பெங்களூரு: கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவிக்கு செல்லும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெலகாவி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மராத்திய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கர்நாடகாவுக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று (நவம்பர் 25) கருப்பு மையை பூசினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த பேருந்துகளுக்கு கர்நாடகாவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவி நகர மைய பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டுவந்த 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவி, சிக்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கும்போல் இயங்கிவருகின்றன. இந்த எல்லை விவகாரம் தொடர்பாக மாகராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம். சட்டப்படி விவகாரம் அணுகப்படும் என்று தெரிவித்திருந்தார். மறுப்புறும் மகாராஷ்டிராவுடனான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

பெலகாவி உள்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் எல்லையில் இருக்கும் மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் உரிமையை கோருவதாக சர்ச்சை எழுந்ததுள்ளது. அதேபோல மாகாராஷ்டிராவின் சோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னடம் பேசும் மக்கள் உள்ளனர் அவர்களும் சில பகுதிகளை கர்நாடகா உடன் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு

பெங்களூரு: கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவிக்கு செல்லும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெலகாவி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மராத்திய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கர்நாடகாவுக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று (நவம்பர் 25) கருப்பு மையை பூசினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த பேருந்துகளுக்கு கர்நாடகாவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவி நகர மைய பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டுவந்த 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து பெலகாவி, சிக்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கும்போல் இயங்கிவருகின்றன. இந்த எல்லை விவகாரம் தொடர்பாக மாகராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம். சட்டப்படி விவகாரம் அணுகப்படும் என்று தெரிவித்திருந்தார். மறுப்புறும் மகாராஷ்டிராவுடனான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

பெலகாவி உள்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் 80 மராத்தி மொழி பேசும் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் எல்லையில் இருக்கும் மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் உரிமையை கோருவதாக சர்ச்சை எழுந்ததுள்ளது. அதேபோல மாகாராஷ்டிராவின் சோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னடம் பேசும் மக்கள் உள்ளனர் அவர்களும் சில பகுதிகளை கர்நாடகா உடன் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.