ETV Bharat / bharat

சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்க ஐக்கிய கூட்டணிக்கு பாஜக லஞ்சம் கொடுத்தது: மம்தா

author img

By

Published : Mar 27, 2021, 12:12 PM IST

இடது முன்னணி, காங்கிரஸ் மற்றும் அப்பாஸ் சித்திக் தொடங்கிய அகில இந்திய மதச்சார்பற்ற முன்னணி (AISF) ஆகியவை சேர்ந்த ஐக்கிய கூட்டணி, சிறுபான்மை வாக்குகளைப் பிரித்து காவி முகாமுக்கு பயனளிக்கும் வகையில் பாஜகவிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Mamata
Mamata

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர்பிரதிமாவில் வியாழக்கிழமை நடந்த பேரணியில் அவர் முக்கியமாக பாஜகவை குறிவைத்த போதிலும், அவர் ஐக்கிய கூட்டணியையும் விடவில்லை. "சிறுபான்மை வாக்குகளை இடது முன்னணியைப் பிரிக்கும் திட்டத்துடன், காங்கிரசும் மேலும் ஒரு கட்சியும் பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளன. அந்த கட்சி பாஜகவிடம் இருந்து நிறைய பணம் வாங்கியுள்ளது. எனவே சூழ்ச்சியில் சிக்கி உங்கள் வாக்குகளை பாழாக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்”என்று முதலமைச்சர் மம்தா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியபோது டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் டெல்லி மசோதா 2021இன் அனுமதியையும் அவர் குறிப்பிட்டார். டெல்லி மாநில அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்க பாஜக சதி செய்து வருகிறது. அடால்ஃப் ஹிட்லர் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை, ”என்று அவர் கூறினார்.

பல்வேறு தேர்தல் கூட்டங்களில், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா மற்றும் சுவேந்து அதிகாரி போன்ற மாநில தலைவர்கள் திருணமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

பதர்பிரதிமா கூட்டத்தை அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முதலமைச்சர் தேர்வு செய்தார். “நானா திருடி? நானா கொள்ளைக்காரி? நானா கொலைகாரி? நான் மக்களை நேசிக்கிறேன். மாறாக நீங்கள் ஒரு திருடன். நீங்கள் PM கேர் நிதியிலிருந்து பணத்தை எடுத்தீர்கள். ரயில்வே உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றீர்கள். அந்த பணம் எங்கே போய்விட்டது? மக்களுக்கு இந்த பணம் ஒருபோதும் கிடைக்கவில்லை, ”என்றார்.

மாநிலத்தின் பெருமையாக இருந்த ஆம்பன் நிதிக்கு பாஜகவும் உரிமை கொண்டாட முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பாஜக தலைவர்கள் ஊடகங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்றனர் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். "பாஜக ஊடக உரிமையாளர்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்துகிறது, பின்னர் அவர்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது லஞ்சம் கொடுப்பதன் மூலமோ பொய் செய்திகளை பரப்புமாறு கட்டாயப்படுத்துகிறது. திருணமூல் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று வாக்கெடுப்புக்கு முந்தைய கணக்கெடுப்பு காட்டுமானால், திரிணாமுலுக்கு குறைவான தொகுதியே கிடைக்கும் என ஒளிபரப்ப பாஜக தலைவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், திரிபுராவில் பாஜகவின் ஆட்சி குறித்தும் பேசினார். “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அரசு பணிக்கொடைகளை நிறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வங்காளத்தில் அவர்கள் கொள்ளையடிக்க முயன்றால் பெண்கள் தங்களிடம் உள்ள சமையல் பாத்திரங்களை கொண்டு அவர்களை எதிர்க்க வேண்டும். அவர்களை தைரியமாக அறைந்து விடுங்கள். நான் ஏதேனும் தவறு செய்தால், என்னையும் இதேபோல் நடத்துங்கள், வரும் நாட்களில் சுந்தரவன சதுப்பு காடுகளில் ஐந்து கோடி மரங்கள் நடப்படும்" என உறுதியளித்தார்.

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர்பிரதிமாவில் வியாழக்கிழமை நடந்த பேரணியில் அவர் முக்கியமாக பாஜகவை குறிவைத்த போதிலும், அவர் ஐக்கிய கூட்டணியையும் விடவில்லை. "சிறுபான்மை வாக்குகளை இடது முன்னணியைப் பிரிக்கும் திட்டத்துடன், காங்கிரசும் மேலும் ஒரு கட்சியும் பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளன. அந்த கட்சி பாஜகவிடம் இருந்து நிறைய பணம் வாங்கியுள்ளது. எனவே சூழ்ச்சியில் சிக்கி உங்கள் வாக்குகளை பாழாக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்”என்று முதலமைச்சர் மம்தா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியபோது டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் டெல்லி மசோதா 2021இன் அனுமதியையும் அவர் குறிப்பிட்டார். டெல்லி மாநில அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்க பாஜக சதி செய்து வருகிறது. அடால்ஃப் ஹிட்லர் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை, ”என்று அவர் கூறினார்.

பல்வேறு தேர்தல் கூட்டங்களில், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா மற்றும் சுவேந்து அதிகாரி போன்ற மாநில தலைவர்கள் திருணமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

பதர்பிரதிமா கூட்டத்தை அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முதலமைச்சர் தேர்வு செய்தார். “நானா திருடி? நானா கொள்ளைக்காரி? நானா கொலைகாரி? நான் மக்களை நேசிக்கிறேன். மாறாக நீங்கள் ஒரு திருடன். நீங்கள் PM கேர் நிதியிலிருந்து பணத்தை எடுத்தீர்கள். ரயில்வே உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றீர்கள். அந்த பணம் எங்கே போய்விட்டது? மக்களுக்கு இந்த பணம் ஒருபோதும் கிடைக்கவில்லை, ”என்றார்.

மாநிலத்தின் பெருமையாக இருந்த ஆம்பன் நிதிக்கு பாஜகவும் உரிமை கொண்டாட முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பாஜக தலைவர்கள் ஊடகங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்றனர் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். "பாஜக ஊடக உரிமையாளர்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்துகிறது, பின்னர் அவர்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது லஞ்சம் கொடுப்பதன் மூலமோ பொய் செய்திகளை பரப்புமாறு கட்டாயப்படுத்துகிறது. திருணமூல் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று வாக்கெடுப்புக்கு முந்தைய கணக்கெடுப்பு காட்டுமானால், திரிணாமுலுக்கு குறைவான தொகுதியே கிடைக்கும் என ஒளிபரப்ப பாஜக தலைவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், திரிபுராவில் பாஜகவின் ஆட்சி குறித்தும் பேசினார். “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அரசு பணிக்கொடைகளை நிறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வங்காளத்தில் அவர்கள் கொள்ளையடிக்க முயன்றால் பெண்கள் தங்களிடம் உள்ள சமையல் பாத்திரங்களை கொண்டு அவர்களை எதிர்க்க வேண்டும். அவர்களை தைரியமாக அறைந்து விடுங்கள். நான் ஏதேனும் தவறு செய்தால், என்னையும் இதேபோல் நடத்துங்கள், வரும் நாட்களில் சுந்தரவன சதுப்பு காடுகளில் ஐந்து கோடி மரங்கள் நடப்படும்" என உறுதியளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.