ETV Bharat / bharat

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மம்தாவை பழிவாங்குவது உறுதி - பாஜக தலைவர் சூளுரை

author img

By

Published : Jun 21, 2020, 4:48 PM IST

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸை பழிவாங்குவோம் என பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மம்தாவை பழிவாங்குவது உறுதி - பாஜக தலைவர் சூளுரை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மம்தாவை பழிவாங்குவது உறுதி - பாஜக தலைவர் சூளுரை

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.

2011ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரையில் 'போட்லா நொய், போடோல் சாய்' (மாற்றம் செய்வோம், பழிவாங்குதல் அல்ல) என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிபிஐ (எம்) தலைமையிலான அரசை வீழ்த்தி மம்தா முதலமைச்சரானார். பின்னர், பழிவாங்கும் எண்ணத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதாக அக்கட்சியை சிபிஐ(எம்) எதிர்த்தது. அதற்கு பதிலடியாக, "மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தான் ஆட்சி மாற்றம், பழிவாங்குவதற்கு அல்ல" என மம்தா கூறியிருந்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை அடியோடு மாற்றி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பழிவாங்கியே தீருவோம்” என்ற பொருளில் 'போட்லாவ் ஹோபி, போடோலோ ஹோபி' (மாற்றம் மட்டுமல்ல பழிவாங்கலும் நடைபெறும்) என பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக ஊடங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பழிவாங்க மாட்டோமென்று கூறி டி.எம்.சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில், அவர்கள் செய்தது எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலை மட்டுமே. கடந்த சில ஆண்டுகளில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது, இந்த சமூக விரோத மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நிற்பது உறுதி. அதே போல அடுத்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. ஆட்சி மாறும்போது, டி.எம்.சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் அளிக்கப்படும். இதை நாங்கள் செய்யவில்லையெனில், மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்" என தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோன்ற கருத்துக்கள் தங்களது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று கருதிய பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், திலீப் கோஷின் கருத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.

2011ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரையில் 'போட்லா நொய், போடோல் சாய்' (மாற்றம் செய்வோம், பழிவாங்குதல் அல்ல) என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிபிஐ (எம்) தலைமையிலான அரசை வீழ்த்தி மம்தா முதலமைச்சரானார். பின்னர், பழிவாங்கும் எண்ணத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதாக அக்கட்சியை சிபிஐ(எம்) எதிர்த்தது. அதற்கு பதிலடியாக, "மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தான் ஆட்சி மாற்றம், பழிவாங்குவதற்கு அல்ல" என மம்தா கூறியிருந்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை அடியோடு மாற்றி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பழிவாங்கியே தீருவோம்” என்ற பொருளில் 'போட்லாவ் ஹோபி, போடோலோ ஹோபி' (மாற்றம் மட்டுமல்ல பழிவாங்கலும் நடைபெறும்) என பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக ஊடங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பழிவாங்க மாட்டோமென்று கூறி டி.எம்.சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில், அவர்கள் செய்தது எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலை மட்டுமே. கடந்த சில ஆண்டுகளில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது, இந்த சமூக விரோத மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நிற்பது உறுதி. அதே போல அடுத்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. ஆட்சி மாறும்போது, டி.எம்.சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் அளிக்கப்படும். இதை நாங்கள் செய்யவில்லையெனில், மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்" என தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோன்ற கருத்துக்கள் தங்களது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று கருதிய பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், திலீப் கோஷின் கருத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.