ETV Bharat / bharat

கரோனா தடுப்பு நடவடிக்கை - இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் வழிமுறைகள்!

author img

By

Published : Mar 30, 2020, 7:08 PM IST

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடல்களை தகனம் செய்வது குறித்தும், விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Unprecedented Situations Call for Unprecedented Preparations
Unprecedented Situations Call for Unprecedented Preparations

இந்தியா இதுவரை சந்தித்திடாத அளவு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை சந்திக்கவுள்ளது. இதுவரை தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த ஒரு சுகாதாரப் பேரழிவை இந்தியா சந்தித்ததில்லை. முடக்கம் என்ற வார்த்தை பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வேற்று சொல் போல தெரியும். மார்ச் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவு முடக்கம் என அறிவித்தபின்புதான் இந்தியர்களுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம் புரிந்திருக்கும்.

மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்த 68 வயது மூதாட்டியை நிகாம்போத் காட் அலுவலர்கள் தகனம் செய்ய மறுத்துவிட்டனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகள் தெரியாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பின்னர் மூதாட்டி சிகிச்சை பெற்றுவந்த ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவர்கள் தலையிட்டபின், மின் மயனாத்தில் மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மூதாட்டியின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தில்தான் மருத்துவர்கள் இப்பிரச்னையில் தலையிட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஒரு பிரச்னை மட்டுமல்ல, பிகாரில் உள்ள கிராமம் ஒன்றில், கரோனா தொற்றால் இறந்தவர் உடலை நீண்ட நேரமாக வீட்டிலேயே வைத்திருந்தனர். இறுதிச் சடங்குக்காக அப்பகுதியை சேர்ந்த பலரும் அங்கு கூடினர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தை சேர்தத அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேபோல் கொல்கத்தாவில் கரோனா தொற்றால் இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. மயான ஊழியர்களும் தொற்றுக்கு பயந்து தகனம் செய்ய மறுத்தனர். 10 மணி நேர காலதாமதத்துக்குப் பின்னர் அவரது உடல் மின் மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பான்மையான உடல்கள் பொது வெளியில் தகனம் செய்யப்படுவதால், கரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை தகனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, நோய் தொற்று பரவாமை உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும். மதச் சடங்குகள் செய்யும்போது உடலைத் தொட அனுமதி கிடையாது.

சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைப்படி, தகனம் செய்யப்பட்டவர்களின் அஸ்தியை காற்றில் கலக்கவிடாது இறுதிச் சடங்குக்கு பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மயானத்தால் அதிகமான நபர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நோய் என்பதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து கண்டறிய சிறிது காலமானது, தொற்றுநோய் தொடர்பான ஆய்வுகளின்படி தற்போது இந்த வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் உடலை லீக் ஆகாத பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். பையின் வெளிப்புறத்தை ஒரு சதவிகிதம் ஹைப்போகுலோரைட் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அதன்பிறகே பிணவறை இருக்கையில் உடல் கிடத்தப்படும். உடல்களை கொண்டு செல்ல போக்குவரத்து வசதி, பயிற்சி பெற்ற ஊழியர்கள் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கைகளின் தூய்மை, சானிடைசர் பயன்பாடு மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து ஊடகங்கள் மூலம் அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கரோனா பிரச்னையின் இந்திய அரசாங்கத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், தகனம் செய்வது பற்றிய கவலை இங்கு பெரிதாக இல்லை. எனினும் அதற்கான பணிகள் முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. வரும் முன் காப்பதே சிறந்தது, இந்தியா அந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. எதிர்பாராத சூழலில் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக இந்தியா எப்படி போரிட வேண்டும் - டி எஸ் ஹூடா

இந்தியா இதுவரை சந்தித்திடாத அளவு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை சந்திக்கவுள்ளது. இதுவரை தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த ஒரு சுகாதாரப் பேரழிவை இந்தியா சந்தித்ததில்லை. முடக்கம் என்ற வார்த்தை பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வேற்று சொல் போல தெரியும். மார்ச் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவு முடக்கம் என அறிவித்தபின்புதான் இந்தியர்களுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம் புரிந்திருக்கும்.

மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்த 68 வயது மூதாட்டியை நிகாம்போத் காட் அலுவலர்கள் தகனம் செய்ய மறுத்துவிட்டனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகள் தெரியாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பின்னர் மூதாட்டி சிகிச்சை பெற்றுவந்த ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவர்கள் தலையிட்டபின், மின் மயனாத்தில் மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மூதாட்டியின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தில்தான் மருத்துவர்கள் இப்பிரச்னையில் தலையிட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஒரு பிரச்னை மட்டுமல்ல, பிகாரில் உள்ள கிராமம் ஒன்றில், கரோனா தொற்றால் இறந்தவர் உடலை நீண்ட நேரமாக வீட்டிலேயே வைத்திருந்தனர். இறுதிச் சடங்குக்காக அப்பகுதியை சேர்ந்த பலரும் அங்கு கூடினர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தை சேர்தத அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேபோல் கொல்கத்தாவில் கரோனா தொற்றால் இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. மயான ஊழியர்களும் தொற்றுக்கு பயந்து தகனம் செய்ய மறுத்தனர். 10 மணி நேர காலதாமதத்துக்குப் பின்னர் அவரது உடல் மின் மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பான்மையான உடல்கள் பொது வெளியில் தகனம் செய்யப்படுவதால், கரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை தகனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, நோய் தொற்று பரவாமை உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும். மதச் சடங்குகள் செய்யும்போது உடலைத் தொட அனுமதி கிடையாது.

சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைப்படி, தகனம் செய்யப்பட்டவர்களின் அஸ்தியை காற்றில் கலக்கவிடாது இறுதிச் சடங்குக்கு பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மயானத்தால் அதிகமான நபர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நோய் என்பதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து கண்டறிய சிறிது காலமானது, தொற்றுநோய் தொடர்பான ஆய்வுகளின்படி தற்போது இந்த வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் உடலை லீக் ஆகாத பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். பையின் வெளிப்புறத்தை ஒரு சதவிகிதம் ஹைப்போகுலோரைட் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அதன்பிறகே பிணவறை இருக்கையில் உடல் கிடத்தப்படும். உடல்களை கொண்டு செல்ல போக்குவரத்து வசதி, பயிற்சி பெற்ற ஊழியர்கள் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கைகளின் தூய்மை, சானிடைசர் பயன்பாடு மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து ஊடகங்கள் மூலம் அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கரோனா பிரச்னையின் இந்திய அரசாங்கத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், தகனம் செய்வது பற்றிய கவலை இங்கு பெரிதாக இல்லை. எனினும் அதற்கான பணிகள் முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. வரும் முன் காப்பதே சிறந்தது, இந்தியா அந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. எதிர்பாராத சூழலில் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக இந்தியா எப்படி போரிட வேண்டும் - டி எஸ் ஹூடா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.