ETV Bharat / bharat

ஏன் இங்க விளையாடுறீங்க... 2 குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய அண்டை வீட்டுக்காரர் கைது!

author img

By

Published : Jun 16, 2020, 1:22 AM IST

கொல்கத்தா: தன்னுடைய வீட்டின் முன்பாக பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடுவதை பொறுக்க முடியாமல் 4ஆவது மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குழந்தை
குழந்தை

கொல்கத்தா புர்ரா பஜார் பகுதியில் இந்த கொடூர சம்பவ அரங்கேறியுள்ளது. குழந்தைகளின் தந்தைக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ஷிவ் குமார் குப்தாவிற்கும் (55) கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் வீட்டுக்கும் பொதுவான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகிய இருவரையும் ஷிவ் குமார் மாடியிலிருந்து தூக்கி வீசியதாக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறையினர், “ பலத்தக் காயங்களுடன் 6 வயது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஷிவ் குமார் குப்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

கொல்கத்தா புர்ரா பஜார் பகுதியில் இந்த கொடூர சம்பவ அரங்கேறியுள்ளது. குழந்தைகளின் தந்தைக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ஷிவ் குமார் குப்தாவிற்கும் (55) கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் வீட்டுக்கும் பொதுவான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகிய இருவரையும் ஷிவ் குமார் மாடியிலிருந்து தூக்கி வீசியதாக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறையினர், “ பலத்தக் காயங்களுடன் 6 வயது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஷிவ் குமார் குப்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மசாலா மோரை அறிமுகப்படுத்திய கோக் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.