ETV Bharat / bharat

கை, கால்கள் கட்டப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை!

author img

By

Published : Aug 31, 2020, 6:03 PM IST

Updated : Aug 31, 2020, 10:15 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைகால்கள் கட்டப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை !
கைகால்கள் கட்டப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை !

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்துள்ள நாக்லா கிஷன் லால் பகுதியைச் சேர்ந்தவர் ராம்வீர். மளிகைக் கடை தொழில் செய்துவந்த அவரும், அவரது மனைவி மீரா மற்றும் அவர்களது மகன் பாப்லூ (23) ஆகிய மூவரும் கடைக்கு அருகே வசித்து வந்தனர். வழக்கமாக, விடியற்காலையிலேயே கடையை திறக்கும் அவர், அன்று திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராம்வீர் வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையறிந்த கூடுதல் காவல் தலைவர் அஜய் ஆனந்த், ஐஜி ஏ.சதீஷ் கணேஷ் மற்றும் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) பாப்லூ குமார் ஆகியோர் தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் பாலிதீன் திணிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் மூன்று பேரின் கொலை தொடர்பாக சந்தேகம் வராமல் இருக்க அவர்களது வீட்டின் கேஸ் சிலிண்டரை அறுத்து, மூவரையும் வீட்டோடு எரிப்பதற்கு கொலை செய்தவர் திட்டமிட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ள காவல் துறையினர், அவரது வீட்டிற்கு அருகிலேயே வசித்துவரும் ராம்வீரின் சகோதரரை அழைத்து முதல்கட்ட விசாரணையை இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கினர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்துள்ள நாக்லா கிஷன் லால் பகுதியைச் சேர்ந்தவர் ராம்வீர். மளிகைக் கடை தொழில் செய்துவந்த அவரும், அவரது மனைவி மீரா மற்றும் அவர்களது மகன் பாப்லூ (23) ஆகிய மூவரும் கடைக்கு அருகே வசித்து வந்தனர். வழக்கமாக, விடியற்காலையிலேயே கடையை திறக்கும் அவர், அன்று திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராம்வீர் வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையறிந்த கூடுதல் காவல் தலைவர் அஜய் ஆனந்த், ஐஜி ஏ.சதீஷ் கணேஷ் மற்றும் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) பாப்லூ குமார் ஆகியோர் தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் பாலிதீன் திணிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் மூன்று பேரின் கொலை தொடர்பாக சந்தேகம் வராமல் இருக்க அவர்களது வீட்டின் கேஸ் சிலிண்டரை அறுத்து, மூவரையும் வீட்டோடு எரிப்பதற்கு கொலை செய்தவர் திட்டமிட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ள காவல் துறையினர், அவரது வீட்டிற்கு அருகிலேயே வசித்துவரும் ராம்வீரின் சகோதரரை அழைத்து முதல்கட்ட விசாரணையை இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கினர்.

Last Updated : Aug 31, 2020, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.