மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் நடக்கும் கூட்டு வன்முறைகளுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்காமல் இருப்பது. மற்றொன்று மக்களின் மனநிலையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மாற்றியது. இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா ஒரு எடுத்துக்காட்டாகும்" என்றார்.
முன்னதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி ஊழியரை தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.