பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-கம்யூனிச கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், நேற்று பிகாரின் ஜமுய் என்ற மாவட்த்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் முதலமைச்சரானால், எனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். நான் ஒரு பிகாரி, சொன்ன சொல்லை காப்பாற்றுபவன். நான் மக்கள் சேவையில் நீண்ட காலம் இருக்கவுள்ளேன், நான் பொய் கூற மாட்டேன்.