ETV Bharat / bharat

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக ஏழு மறு சீராய்வு மனு! - review of Ayodhya verdict

டெல்லி: அயோத்தி தீர்ப்புக்கு எதிராக ஏழு மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SC
SC
author img

By

Published : Dec 6, 2019, 11:06 PM IST

அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏழு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் ஆதரவுடன் வுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மஹபூசுர் ரகுமான், மிஸ்பாஹுதின் ஆகியோர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதைத் தவிர்த்து ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு சார்பாக, மவுலானா சையத் அஸ்ஸத் ரஷிதி என்பவர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அமைதிக்கட்சித்தலைவர் முகமது அயூப்பும் மற்றொரு நபரும் மனு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏழு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் ஆதரவுடன் வுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மஹபூசுர் ரகுமான், மிஸ்பாஹுதின் ஆகியோர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதைத் தவிர்த்து ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு சார்பாக, மவுலானா சையத் அஸ்ஸத் ரஷிதி என்பவர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அமைதிக்கட்சித்தலைவர் முகமது அயூப்பும் மற்றொரு நபரும் மனு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.