காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் குல்ஷான்பூர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்று பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, பாதுகாப்புப் படையினரைக் கண்ட பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, இருதரப்பினரும் ஒருவர் மேல் ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் - மம்தா வலியுறுத்தல்