ETV Bharat / bharat

என்.ஆர்.சி.யில் திருநங்கைகள் நீக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jan 27, 2020, 4:33 PM IST

Updated : Jan 27, 2020, 4:46 PM IST

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SC
SC

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக 3.29 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தான விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, வெளியிடப்பட்ட பட்டியலில் திருநங்கைள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியான பரூஹா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு ஏற்பட்ட கதி!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக 3.29 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தான விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, வெளியிடப்பட்ட பட்டியலில் திருநங்கைள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியான பரூஹா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு ஏற்பட்ட கதி!

ZCZC
PRI GEN LGL NAT
.NEWDELHI LGD14
SC-ASSAM NRC
SC seeks Centre, Assam's response on plea alleging exclusion of transgenders in NRC
         New Delhi, Jan 27 (PTI) The Supreme Court on Monday sought response of the Centre and Assam government on a plea alleging exclusion of around 2000 transgenders in the final National Register of Citizens (NRC) in Assam.
          A bench comprising Chief Justice S A Bobde and justices B R Gavai and Surya Kant issued notice to the government on the PIL filed by one Swati Bidhan Baruah.
          Baruah, the first transgender judge from Assam, has moved the Supreme Court, citing exclusion of transgenders during the NRC process and at stages subsequent to publication of the final draft. PTI SJK RKS LLP LLP
DV
DV
01271304
NNNN
Last Updated : Jan 27, 2020, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.