டெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூன்று நீதிபதிகளை நிரந்தரமாக பணி நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தன் பேரில் நீதிபதி மணீஷ் சௌத்ரி, கௌகாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
இதுமட்டுமின்றி நிதிபதிகள் சஞ்சய் குமார் மேதி, நானி தாகியாஸ் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சஞ்சய் குமார் கௌகாத்தியிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் தொடக்கப் பள்ளியை படித்தவர். அதன்பிறகு, டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த இவர், 2018ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முதல் கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக உள்ளார்.
தாகியா, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருந்தார். இந்நிலையில், இவரும் 2018ஆம் ஆண்டு கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மூத்த வழக்குரைஞரான நீதிபதி சௌத்ரி, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு தேர்வானார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, என்.வி., ரமணா, ஆர். எ.ஃப். நாரிமன், யூ.யூ. லலித், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற அதிகாரத்தை அசைத்துப் பார்க்க முயன்ற அலுவலர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!