ETV Bharat / bharat

ஆந்திராவின் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி : மனுதாரர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

author img

By

Published : Sep 3, 2020, 4:50 PM IST

டெல்லி: ஆந்திராவில் தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மாநில அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியிலிருந்து ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், ஆந்திர உயர் நீதிமன்றம் அம்மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது.

டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம். ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், மாநில அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், ”பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்புக்கு உட்பட்டு இதனை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மனுதாரரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் நாராயணன், இது குறித்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 75 விழுக்காடு வங்காள மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளவில்லை - மம்தா

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியிலிருந்து ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், ஆந்திர உயர் நீதிமன்றம் அம்மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது.

டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம். ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஸ்ரீநிவாஸ் குந்திபல்லி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், மாநில அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், ”பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்புக்கு உட்பட்டு இதனை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மனுதாரரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் நாராயணன், இது குறித்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 75 விழுக்காடு வங்காள மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளவில்லை - மம்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.