ETV Bharat / bharat

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்!

author img

By

Published : Mar 20, 2020, 11:18 AM IST

பெங்களூரு: மத்தியப் பிரதேசத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு அம்மாநில காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்!  பெங்களூரு சொகுசு விடுதி  மத்தியப் பிரதேசம், நம்பிக்கை வாக்கெடுப்பு, காங்கிரஸ், பாஜக, கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா  Rebel MP Cong MLAs await SC order before next move  Cong MLAs await SC order  MP govt crisi
காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்! பெங்களூரு சொகுசு விடுதி மத்தியப் பிரதேசம், நம்பிக்கை வாக்கெடுப்பு, காங்கிரஸ், பாஜக, கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா Rebel MP Cong MLAs await SC order before next move Cong MLAs await SC order MP govt crisi

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அவருடன் ஆதரவாளர்கள் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்களும் கட்சியிலிருந்து விலகினர். இதையடுத்து சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதனால் கமல்நாத் அரசு கவிழும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

தற்போது எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அவையை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஜகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு அவர்களுக்கு மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ம.பி. சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அவருடன் ஆதரவாளர்கள் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்களும் கட்சியிலிருந்து விலகினர். இதையடுத்து சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதனால் கமல்நாத் அரசு கவிழும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

தற்போது எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அவையை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஜகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு அவர்களுக்கு மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ம.பி. சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.