ETV Bharat / bharat

‘மத்திய அரசு எங்களின் உரிமைகளைப் பறிக்கிறது’ - நாராயணசாமி

author img

By

Published : Jul 23, 2019, 9:44 PM IST

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்கு எதிரானது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமி

புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீர் மேலாண்மைக்குக் கூடுதல் நிதி வழங்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ்நாடு, புதுச்சேரி பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையைக் காலவரையின்றி ஒத்தி வைத்தார் .

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்கு எதிரான செயல். மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு ஆளுநர் மூலம் மாநிலத்தின் உரிமைகளைத் தட்டிப் பறிப்பது வேதனை அளிக்கிறது. ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பார் என நம்புகிறேன்" என்றார்.

நாராயணசாமி

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கடந்த மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீர் மேலாண்மைக்குக் கூடுதல் நிதி வழங்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ்நாடு, புதுச்சேரி பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையைக் காலவரையின்றி ஒத்தி வைத்தார் .

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்கு எதிரான செயல். மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு ஆளுநர் மூலம் மாநிலத்தின் உரிமைகளைத் தட்டிப் பறிப்பது வேதனை அளிக்கிறது. ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பார் என நம்புகிறேன்" என்றார்.

நாராயணசாமி

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கடந்த மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Intro:புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தில் நீர் மேலாண்மைக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோருதல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழ் மொழி உட்பட இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பது உள்ளிட்ட 4 அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் காலவரையின்றி பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து


Body:புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் நீர் மேலாண்மைக்கும் நீர்வள பாதுகாப்பிற்கும் கூடுதல் நிதி வழங்க கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என்றும் தமிழ் உட்பட இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மேலும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார் இதனை தொடர்ந்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து.

பேரவை முடிந்தபின் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்கு எதிரான செயல் என்றும் மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஆளுநர் மூலம் மாநிலத்தின் உரிமைகளை தட்டிப் பறிப்பது மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பார் என நம்புகிறேன் என்றார்

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 2019 20 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும் ஆனால் நிதி பற்றாக்குறை பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அரசின் ஐந்து மாத சில தினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டு கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதனால் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது இதற்காக திட்டக்குழு கோடி ரூபாய் 8 ஆயிரத்து 455 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அனுமதி கேட்டு கோப்பு அனுப்பியுள்ளது இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது




Conclusion:புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தில் நீர் மேலாண்மைக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோருதல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழ் மொழி உட்பட இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பது உள்ளிட்ட 4 அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் காலவரையின்றி பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.