ETV Bharat / bharat

'' நரேந்திர மோடியின் நண்பர்களுக்குத் தாரை வார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் '' - சோனியா காந்தி குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 28, 2019, 11:58 AM IST

டெல்லி: லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களுக்குத் தாரை வார்க்கப்படுவதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Sonia
Sonia

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார்.

பாஜகவின் நடவடிக்கை குறித்து பேசிய அவர், ' மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவமானத்திற்குரியது எனவும், நாட்டின் ஜனநாயக மாண்பை பாஜக குழி தோண்டி புதைத்து வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை நரேந்திர மோடி தனது நண்பர்களுக்குத் தாரை வார்ப்பதாகத் தெரிவித்த சோனியா காந்தி, இந்திய அரசியல் தலைவர்களைக் காஷ்மீருக்குச் செல்லவிடாமல் தடுப்பது வெட்கத்திற்குரியது என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் துணை முதலமைச்சராகும் அஜித் பவார் - 'மகா விகாஸ் அகாதி' கூட்டணியின் அடுத்த அதிரடி!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார்.

பாஜகவின் நடவடிக்கை குறித்து பேசிய அவர், ' மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவமானத்திற்குரியது எனவும், நாட்டின் ஜனநாயக மாண்பை பாஜக குழி தோண்டி புதைத்து வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை நரேந்திர மோடி தனது நண்பர்களுக்குத் தாரை வார்ப்பதாகத் தெரிவித்த சோனியா காந்தி, இந்திய அரசியல் தலைவர்களைக் காஷ்மீருக்குச் செல்லவிடாமல் தடுப்பது வெட்கத்திற்குரியது என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் துணை முதலமைச்சராகும் அஜித் பவார் - 'மகா விகாஸ் அகாதி' கூட்டணியின் அடுத்த அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.