காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்வீட்டரில், “பிரதமர் சோதித்து பார்க்கிறார். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகயை அறிவிப்பது அவசியம்.
அந்த வகையில் பிரதமருக்கு வேறு வழியில்லை. அவர் மீண்டும் மக்கள் முன்னிலையில் உரையாற்றுவார். அப்போது கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கையை அறிவிப்பது தவிர வேறு வழியில்லை.” என கூறியுள்ளார்.
எனினும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “மக்கள் ஊடரங்கு” வேண்டுகோளுக்கு ப.சிதம்பரம் ஆதரவளித்தார். பிரதமரின் இந்த முன்முயற்சியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
I have the feeling that the PM will come back in the next few days to announce tougher social and economic measures.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have the feeling that the PM will come back in the next few days to announce tougher social and economic measures.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 19, 2020I have the feeling that the PM will come back in the next few days to announce tougher social and economic measures.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 19, 2020
பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி (அதாவது நாளை) 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, மார்ச் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு குடிமகனும் மக்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 220 ஆக உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.