ETV Bharat / bharat

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட அரசு நூற்பாலை ஊழியர்கள்!

author img

By

Published : Oct 26, 2019, 4:11 PM IST

புதுச்சேரி : அரசு நடத்தும் நூற்பாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி தொழில் துறை அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டது.

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள்

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஸ்பின்கோ நூற்பாலையில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், இரண்டு ஆண்டாக ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள்

இது குறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்பாலை ஊழியர்கள் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தொழில் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க : நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் போராட்டம்!

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஸ்பின்கோ நூற்பாலையில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், இரண்டு ஆண்டாக ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள்

இது குறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்பாலை ஊழியர்கள் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தொழில் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க : நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் போராட்டம்!

Intro:புதுச்சேரி மில்ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்புBody:புதுச்சேரி திருபுவனை பகுதியில் அமைந்துள்ளது அரசுக்கு சொந்தமான ஸ்பின்கோ எனும் நூற்பாலை இங்கு 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த நான்கு மாதமாக மில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் மேலும் இரண்டு வருடமாக போனஸ் வழங்கப்படாது கண்டித்தும் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த ஸ்பின்கோ ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தொழில் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை திடீர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வீட்டில் இருந்து வெளிவந்த அமைச்சர் அவர்களுடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுConclusion:புதுச்சேரி மில்ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.