ETV Bharat / bharat

‘தியாகிகளின் பென்ஷன் உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படும்’ - நாராயணசாமி - ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்த நாராயணசாமி

புதுச்சேரி: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி
புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி
author img

By

Published : Jan 26, 2020, 9:22 AM IST

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கம்பன் கலையரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் வாங்கியக் கடன்களைக் கட்டியும், பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். எந்த மாநிலத்திலாவது முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா நடத்தியதுண்டா? நாங்கள் செய்தோம்" என்றார்.

புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி

தொடர்ந்து பேசிய அவர், இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு நம் மாநிலத்தைப் பிடித்த சனிப் போகும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கம்பன் கலையரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் வாங்கியக் கடன்களைக் கட்டியும், பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். எந்த மாநிலத்திலாவது முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா நடத்தியதுண்டா? நாங்கள் செய்தோம்" என்றார்.

புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி

தொடர்ந்து பேசிய அவர், இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு நம் மாநிலத்தைப் பிடித்த சனிப் போகும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

Intro:புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிம் ரூபாயாக அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமென தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.Body:புதுச்சேரி 25-01-2020
புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிம் ரூபாயாக அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமென தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


நாட்டின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கம்பன் கலையரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ரங்கசாமி ஆட்சியில் வாங்கிய கடன்களை கட்டியும்,பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். எந்த மாநிலத்திலாவது முதல்வர் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா நடத்தியதுண்டா?நாம் செய்தோம். துணைநிலைஆளுநர் கிரண்பேடி தினம் தொல்லை தருகிறார் எனக்கூறும் அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவர் அன்பழகன், பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்து வரும் நிலையில் துணைநிலை ஆளுநரை திரும்ப பெற பிரதமர் மோடியிடம் வலியுறுத்த முடியுமா? நம்மை பிடித்த சனி விரைவில் போகும் அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என்று பேசினார். தொடர்ந்து கடந்து ஆண்டு உயர்த்தி அறிவிக்கப்பட்ட தியாகி பென்ஷனை வரும் ஏப்ரல்மாதத்தில் இருந்து தரப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தார்.Conclusion:புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிம் ரூபாயாக அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமென தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.