ETV Bharat / bharat

100 நாட்கள் சிறைவாசம்: ப. சிதம்பரத்தின் ஜாமின் போராட்டம் தொடருமா? முடிவுக்கு வருமா?

author img

By

Published : Nov 28, 2019, 11:44 AM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி 100 நாட்கள் சிறை வாசத்திலிருக்கும் ப. சிதம்பரத்தின் ஜாமின் கோரிய மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

PChidambaram INX Media case
ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் ப. சிதம்பரம், தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையை நவ.28ஆம் தேதி(இன்று) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்து சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப் போகிறதா அல்லது காவலை நீட்டிக்கப் போகிறதா என்பது இன்று தெரிய வரும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கடந்த வந்த பாதை:

மே 15, 2017: 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பிப்ரவரி 16 2018: வழக்கு குறித்து ப. சிதம்பரத்திடம் விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இதே விவகாரத்தில் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

மே 30, 2018: சிபிஐ தொடுத்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜூலை 23, 2018: அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் முன் ஜாமின் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

ஜூலை 25, 2018: இரு வழக்குகளிலும் ப. சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 25, 2019: சிதம்பரம் கோரிய முன் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ஆகஸ்ட் 20, 2019: சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 3 நாள் அவகாசம் கேட்ட சிதம்பரத்தின் வேண்டுகோளையும் நிராகரித்தது.

ஆகஸ்ட் 21, 2019: உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ப. சிதம்பரத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

ஆகஸ்ட் 22, 2019: சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அடுத்தடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு சிதம்பரம், செப்.5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

செப்டம்பர் 5, 2019: சிதம்பரத்தின் ஜாமின் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரு வாரங்களுக்கு ஒருமுறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

அக்டோபர் 22, 2019: சிபிஐ தொடந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால், இதே விவகாரத்தில் அமலாக்கத் துறையும் அவரை கைது செய்திருப்பதால் ஜாமினில் அவரால் வெளிவர முடியவில்லை.

சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று திஹார் சிறையில் அவரை சந்தித்துப் பேசினர். முன்னதாக, சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் சந்தித்து பேசியிருந்தனர்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி கைதான ப. சிதம்பரம், 15 நாட்கள் நீதிமன்றக் காவல், 85 நாட்கள் திஹார் சிறை வாசம் என மொத்தம் 100 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிதம்பரம் ஜாமின் கோரிய மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேயின் பதவியேற்பு விழா - பாதுகாப்பு குறித்து கவலைப்படும் நீதிமன்றம்...என்ன நடக்கிறது அங்கு?

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் ப. சிதம்பரம், தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையை நவ.28ஆம் தேதி(இன்று) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்து சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப் போகிறதா அல்லது காவலை நீட்டிக்கப் போகிறதா என்பது இன்று தெரிய வரும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கடந்த வந்த பாதை:

மே 15, 2017: 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பிப்ரவரி 16 2018: வழக்கு குறித்து ப. சிதம்பரத்திடம் விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இதே விவகாரத்தில் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

மே 30, 2018: சிபிஐ தொடுத்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜூலை 23, 2018: அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் முன் ஜாமின் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

ஜூலை 25, 2018: இரு வழக்குகளிலும் ப. சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 25, 2019: சிதம்பரம் கோரிய முன் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ஆகஸ்ட் 20, 2019: சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 3 நாள் அவகாசம் கேட்ட சிதம்பரத்தின் வேண்டுகோளையும் நிராகரித்தது.

ஆகஸ்ட் 21, 2019: உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ப. சிதம்பரத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

ஆகஸ்ட் 22, 2019: சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அடுத்தடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு சிதம்பரம், செப்.5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

செப்டம்பர் 5, 2019: சிதம்பரத்தின் ஜாமின் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரு வாரங்களுக்கு ஒருமுறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

அக்டோபர் 22, 2019: சிபிஐ தொடந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால், இதே விவகாரத்தில் அமலாக்கத் துறையும் அவரை கைது செய்திருப்பதால் ஜாமினில் அவரால் வெளிவர முடியவில்லை.

சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று திஹார் சிறையில் அவரை சந்தித்துப் பேசினர். முன்னதாக, சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் சந்தித்து பேசியிருந்தனர்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி கைதான ப. சிதம்பரம், 15 நாட்கள் நீதிமன்றக் காவல், 85 நாட்கள் திஹார் சிறை வாசம் என மொத்தம் 100 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிதம்பரம் ஜாமின் கோரிய மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேயின் பதவியேற்பு விழா - பாதுகாப்பு குறித்து கவலைப்படும் நீதிமன்றம்...என்ன நடக்கிறது அங்கு?

Intro:Body:

PChidambaram - 100Days in Tihar jail -INX Media case-Supreme court


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.