ETV Bharat / bharat

தெலங்கானாவில் மாயமான 2 ஆயிரம் கரோனா நோயாளிகள்!

author img

By

Published : Jul 17, 2020, 11:01 AM IST

ஹைதராபாத்: பத்து நாட்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் மாயமானதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Hyderabad  Telangana coronavirus  Missing corona patients  2000 patients missing  Coronavirus pandemic  ஹைதராபாத்  தெலங்கானா காணமால் போன கரோனா நோயாளிகள்  தெலங்கானா  காணமால் போன கரோனா நோயாளிகள்
தெலங்கானாவில் காணமால் போன 2ஆயிரம் கரோனா நோயாளிகள்

தெலங்கானாவில் கரோனா ரேபிட் சோதனை நடத்திய பின்னர், கடந்த பத்து நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமானதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் சோதனைக்கு வரும்போதே போலியான முகவரியும், போலியான தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொற்று உறுதியானால் சமூகத்தில் உள்ளவர்கள் நம்மை ஒருவித அச்சத்துடன் பார்ப்பார்கள் என்ற பயம் காரணமாக பெரும்பாலானோர் போலியான முகவரி, தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளது தெரியவருகிறது. தொற்று பாதிப்புள்ளவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களுடன் பொதுமக்களாக இருந்தால் தொற்று வேகமாகப் பரவும் என்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் மாயமான சம்பவம் தெலங்கானா மக்களிடையை கடும் பீதியை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!

தெலங்கானாவில் கரோனா ரேபிட் சோதனை நடத்திய பின்னர், கடந்த பத்து நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமானதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் சோதனைக்கு வரும்போதே போலியான முகவரியும், போலியான தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொற்று உறுதியானால் சமூகத்தில் உள்ளவர்கள் நம்மை ஒருவித அச்சத்துடன் பார்ப்பார்கள் என்ற பயம் காரணமாக பெரும்பாலானோர் போலியான முகவரி, தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளது தெரியவருகிறது. தொற்று பாதிப்புள்ளவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களுடன் பொதுமக்களாக இருந்தால் தொற்று வேகமாகப் பரவும் என்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் மாயமான சம்பவம் தெலங்கானா மக்களிடையை கடும் பீதியை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.