ETV Bharat / bharat

பர்தா அணிந்து மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறித்த பெண்!

புதுச்சேரி: பர்தா அணிந்து கொண்டு வீடு புகுந்து மூதாட்டியிடம் மூன்று பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Aug 22, 2019, 6:49 PM IST

theft

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் தேவி. மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது பர்தா அணிந்தபடி வந்த ஒரு பெண் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் தேவியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துசென்றார்.

அப்போது தேவியும் அவரது தங்கை கிளாராவும் அப்பெண்ணை தடுக்க முயன்றபோது, அவர் கத்தியால் வெட்டியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

திருட்டு நடந்த இடத்தில் போலீசாரின் விசாரணை

இந்நிலையில், தேவி அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த தேவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் தேவி வீட்டின் அருகே குடியிருக்கும் மங்கேளஸ்வரி என்ற பெண் சம்பவம் நடந்த தினத்தன்று பர்தா அணிந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, காவல் துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்ட மங்களேஸ்வரியை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட மங்களேஸ்வரியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் தேவி. மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது பர்தா அணிந்தபடி வந்த ஒரு பெண் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் தேவியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துசென்றார்.

அப்போது தேவியும் அவரது தங்கை கிளாராவும் அப்பெண்ணை தடுக்க முயன்றபோது, அவர் கத்தியால் வெட்டியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

திருட்டு நடந்த இடத்தில் போலீசாரின் விசாரணை

இந்நிலையில், தேவி அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த தேவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் தேவி வீட்டின் அருகே குடியிருக்கும் மங்கேளஸ்வரி என்ற பெண் சம்பவம் நடந்த தினத்தன்று பர்தா அணிந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, காவல் துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்ட மங்களேஸ்வரியை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட மங்களேஸ்வரியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Intro:புதுவையில் மூதாட்டிகள் இடம் கத்திமுனையில் நகை கொள்ளையடித்த பர்தா அணிந்த பெண் யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
Body:புதுவையில் மூதாட்டிகள் இடம் கத்திமுனையில் நகை கொள்ளையடித்த பர்தா அணிந்த பெண் யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்


புதுவை கோவிந்த சாலை பகுதியில் வசித்து வருபவர் தேவி மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருந்த போது அப்போது பர்தா அணிந்தபடி வந்த ஒரு பெண் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார் அவர் தண்ணீர் எடுத்து வந்த நிலையில் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துள்ளார். இதைத்யடுத்து தேவி தடுத்த நிலையில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது இதில் அவர் படுகாயம் அடைந்தார் பின்னர் பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும் கிளாரா என்ற பெண்ணிடமும் பர்தா அணிந்து இருந்த மர்மப் பெண்நகை பறிக்க முயன்ற நிலையில் தேவி கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர் இதனால் பர்தா அணிந்த பெண் ஓட்டம் பிடித்தார் இதனுடைய காயமடைந்த தேவையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பர்தா அணிந்து நகை கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை குறித்து தீவிர விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர்Conclusion:புதுவையில் மூதாட்டிகள் இடம் கத்திமுனையில் நகை கொள்ளையடித்த பர்தா அணிந்த பெண் யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.