ETV Bharat / bharat

பாஜக மேலிடப் பார்வையாளரைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: கட்சி பதவி பறிப்பு

புதுச்சேரி: பாஜக மேலிடப் பார்வையாளர் சந்தித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமாரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 13, 2020, 9:36 AM IST

Updated : Dec 13, 2020, 11:23 AM IST

காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் எம்எல்ஏ

சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிவரும் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வட்டார காங்கிரஸ் கட்சிப் பதவியை இரண்டாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துவருகிறது.

அதன்படி நேற்றைய முன்தினம் (டிச. 11) முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சி வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக குமார்‌, வடக்கு வட்டாரத் தலைவராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் எம்எல்ஏ

முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் பிரதேச உறுப்பினராக இருந்த ஜான் குமார் எம்எல்ஏவிற்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை. அவர் பாஜக மேலிடப் பார்வையாளரை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்ததைத் தொடர்ந்து அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க...பாஜக பொறுப்பாளரைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: அடுத்தது புதுச்சேரியா?

சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிவரும் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வட்டார காங்கிரஸ் கட்சிப் பதவியை இரண்டாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துவருகிறது.

அதன்படி நேற்றைய முன்தினம் (டிச. 11) முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சி வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக குமார்‌, வடக்கு வட்டாரத் தலைவராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் எம்எல்ஏ

முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் பிரதேச உறுப்பினராக இருந்த ஜான் குமார் எம்எல்ஏவிற்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை. அவர் பாஜக மேலிடப் பார்வையாளரை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்ததைத் தொடர்ந்து அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க...பாஜக பொறுப்பாளரைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: அடுத்தது புதுச்சேரியா?

Last Updated : Dec 13, 2020, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.