ETV Bharat / bharat

‘வேலையில் சிறியது, பெரியது என்பது கிடையாது’ - ஃபுட் டெலிவரி கேர்ள்! - ஃபுட் டெலிவர் கேர்ளாக பணிபுரியும் பெண்

ஹைதராபாத்: மாணவி ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஃபுட் டெலிவரி கேர்ளாக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அசத்தி வருகிறார்.

food delivery girl
author img

By

Published : Oct 19, 2019, 2:21 PM IST

ஹைதராபாத்தில் வசித்து வரும் ஜனனி ராவ் (20) என்ற இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். கல்லூரியில் படித்துக்கொண்டே, மாலை நேரங்களில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பகுதி நேர வேலை செய்துவருகிறார். இணையதளம் மூலம் இயங்கக்கூடிய ஸ்விகி உணவு விநியோக நிறுவனத்தில் தற்போது பணியாற்றிவருகிறார். இவர் இப்பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இவரது அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து பூர்த்தி செய்துகொள்கிறார்.

இதுகுறித்து ஜனனி ராவ் கூறுகையில், ‘இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதால் இந்த வேலையின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது. ஒவ்வொரு நாளும் நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு பெண் இந்த பணியில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். வேலையில் பெரியது, சிறியது என்பது கிடையாது, எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கின்றது. பார்க்கும் வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அதனை முழுவதுமாக அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு இந்த வேலையில் பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால், என்னை பொறுத்தவரை எதற்கும் பயம் இருக்கக்கூடாது. பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும், எவ்வித தடையுமின்றி’ என்றார்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோ செஃப்!

ஹைதராபாத்தில் வசித்து வரும் ஜனனி ராவ் (20) என்ற இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். கல்லூரியில் படித்துக்கொண்டே, மாலை நேரங்களில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பகுதி நேர வேலை செய்துவருகிறார். இணையதளம் மூலம் இயங்கக்கூடிய ஸ்விகி உணவு விநியோக நிறுவனத்தில் தற்போது பணியாற்றிவருகிறார். இவர் இப்பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இவரது அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து பூர்த்தி செய்துகொள்கிறார்.

இதுகுறித்து ஜனனி ராவ் கூறுகையில், ‘இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதால் இந்த வேலையின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது. ஒவ்வொரு நாளும் நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு பெண் இந்த பணியில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். வேலையில் பெரியது, சிறியது என்பது கிடையாது, எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கின்றது. பார்க்கும் வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அதனை முழுவதுமாக அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு இந்த வேலையில் பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால், என்னை பொறுத்தவரை எதற்கும் பயம் இருக்கக்கூடாது. பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும், எவ்வித தடையுமின்றி’ என்றார்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோ செஃப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.