புதுச்சேரியில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக தனவேலு எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு தனவேலு விளக்கம் அளித்து மாநில காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
தொகுதி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு, என். ரங்கசாமியை முதலமைச்சராக நான் முயற்சி எடுத்ததாகக் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.
காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் நான் செயல்பட்டதாகக் கூறியதையும் மறுக்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருப்பதாகக் கூறியதையும் மறுக்கிறேன்.
என் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்பது ஒருதலைபட்சமாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
![காங்கிரஸ் தலைவருக்கு எம்எல்ஏ தனவேலு அனுப்பிய கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5879131_img.jpg)
இதையும் படிங்க: பாஜகவை இங்கையே வைத்து செய்யணும்...! - ஆபாசமாக பேசிய ஆர்.எஸ். பாரதி